காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்
இயற்கை என்றானபோதும்
காதலில்
தோல்விகள் என்பது
செயற்கைதான்
நாம்
நம் காதலை
தோல்விக்குப் பிறகுதான்
இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டு
கவனமுடன் நடக்கிறோம்
கனவுகள்
எப்படியும் ஏமாற்றிவிட்டு
கலைந்துவிடுகிறது
சிலருக்குக்
கனவுகள் நினைவுகளாகிறது
நினைவுகள் கனவுகளாகிறது
இன்று தேவையில்லாமல்
யார் யாருக்கோ
விட்டுக்கொடுக்கிறோம்
அன்று விட்டுக்கொடுக்காததால்
பிரிந்து தவித்து அழுகிறோம்