ஹைக்கூ எழுதலாம் வாங்க – 22
நடுங்கிக் கொண்டு ரசிக்கிறான்
புன்னகைத் தவழும் முகம்
புல்லில் பனித்துளி - ம. ரமேஷ்
முதலிரண்டு அடிகளில் எதையோ, எங்கோ, தனிமையில் திருட்டுத்தனமாகவோ
ரசிக்கிறான். அதனால் அவன் நடுங்கிக் கொண்டு இருக்கிறான் என்று பொருள் விரிகிறது. புன்னகை
முகத்தோடு உள்ள யாரையோ எதையோ ரசிக்கின்றானா? அம்முகம் பெண் என்றால் பார்த்துவிட்டால்
என்ற நடுக்கமும் ஏற்பட்டு திரும்பவும் ரசிக்கின்றானா? மூன்றாம் அடியில் பனித்துளியை
ரசிக்கிறான் என்றிருப்பதால் நாம் அவனை ரசிக்க வேண்டியதாகிவிடுகிறது. நடுங்கிக் கொண்டு
ரசிக்கும் அந்த நேரத்தில் அவன் முகம் புன்னகைத் தவழ்கின்றது. அல்லது பனித்துளிகளைப் பார்ப்பதால் புன்னகை வந்துள்ளது.
அந்த முகமே 2 வது அடியாகப் பனித்துளியில் 3 அவது அடியாகப் பிரதிபலிக்கிறது. நடுங்கும்
குளிரில் அவனுக்கு அப்படி ஏன் பனித்துளிகளை ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது? அதற்காக
ஏளனம் செய்வதா? நாம் ரசிக்க மறந்ததை அவன் ரசிப்பதற்காக நாம் ஹைக்கூவை ரசிப்பதா? அவன் அப்படி ரசிக்கின்றான் என்றால் அவன் நகரத்திலிருந்து
கிராமத்துக்கு வந்த புதியவனா?... இன்னும்…
இன்னும்…