டேட்டிங்
டேட்டிங் என்கிறாய்!
சரி…போய்த்
தொலையலாம்!!
தனி அறை!
தனிமை!!
இருவர் கையிலும்
புகை!!! மது!!!
“நீ
தொட்டு ரசித்தபோது
அந்த மாமல்லபுரத்துச்
சிற்பமே
நாணி குறுகிப்போனது”
கல்லுக்கு எப்படி
உணர்ச்சியிருக்கும்
என்று
அவள் யோசிக்கவே இல்லை!
கவிதை
கவிதை என்றவள்
புகையும் மதுவும் மயக்கிய
மயக்கத்தில் -
மூன்று மாதத்தில்
கர்ப்பமாகிப்போனாள்!
மருத்துவமனையில் –
படிக்கிற பொண்ணுதானே
கொஞ்சம்
கவனமா இருந்து
மாத்திரை எடுத்துக்க
வேண்டியதுதானே!
இப்ப பாரு அபாஷன்!!
சரி… சரி…
கவுண்டருல
பணம் கட்டிட்டு போ!!!
கரு கலைத்தபோது
காதல்
தொலைந்து போனது.
படிப்பு தொடர்ந்தது.
வேலையில் சேர்ந்தாகிவிட்டது.
அவள் வயிற்றிலிருந்து
பிள்ளையை இறக்கி
வைத்தது தெரியாமல்
அவள் அம்மா
வயிற்றில்
நெருப்பைக் கட்டிக்கொண்டு
இருக்கிறேன் என்றாள்
திருமண நிச்சயம்
நடந்தது.
திருமணம் நடந்தது.
எல்லாம் நடந்தது.
குழந்தை பாக்கியம்தான்
இல்லை என்றது
அபாஷன் செய்த அதே மருத்துவமனை!
‘குழந்தை இல்லைன்னா என்ன?
வேற பெண்ண கட்டிக்க
மாட்டேன்’ என்றான்
அன்பான கணவன்.
அழுது கொண்டாள்!
அன்று நடந்த தவற்றை
மறைத்து
அழுது கொண்டிருக்கிறாள்!!
அவள் அழும்போதெல்லாம்
அவன் குழந்தை இல்லையென்று
அழுவதாக நினைத்து
ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறான்.