· நாம், நம்
கஷ்டங்களை
மறைக்க
கற்றுக்கொண்டோம்.
கடவுள்
நாம்
பொய் பேசுவதாகக்
கணக்கு
வைத்துக்கொள்கிறான்.
· நீ
துன்பங்களையே
பறிமாறிக்கொள்வதால்
நான்
இல்லாத
மகிழ்ச்சியை
ஒப்படைக்கின்றேன்
(நீயாவது ஆறுதல் அடைவாய் என்று)
· உன் கவிதைகளால்
என்
குழந்தைகள் மகிழ்ந்தன
மழைக்காலங்களில்
கப்பல்
செய்துவிட்டு
· உனக்கு
ஆறுதல்
தேவைப்படும்போதாவது
என்னை
அழைக்கிறாயே!
மகிழ்ச்சிதான்
· தவித்தாலும் துடித்தாலும்
ரசிக்கிறார்கள்
காதல்
கவிதைகளை
ஆனால்,
காதலி
நீ
மட்டும்தான் அழுகின்றாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக