“நீ
சம்பாதிச்சது போதும்
நாளைக்கிலிருந்து வேலைக்குப் போக வேண்டாம்”
“ஐயோ! எதுக்குங்க?”
“எந்தக் கேள்வியும் கேக்காதே
வேணாமுன்னா வேணாம்…”
“வீட்டிலிருந்தே எதாவது?”
“ஒரு மண்ணும் வேணாம்…”
“நான் தான்
கைநெறைய சம்பாதிக்கறேன்
இல்ல…”
… … …
… … …
“சரிங்க…”
---
“ஏங்க…
நாளைக்கிலிருந்து வேலைக்குப் போகல”
“எதுக்குடா இப்ப திடீர்னு”
போவ பிடிக்கலைன்னா பிடிக்கலை
விடுங்களேன்”
“எதாவது பிரச்சினையா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…”
“சரி உன் இஷ்டம்…”
சில மாதம் கழித்து
தோழியிடமிருந்து போன் வந்தது.
“அவரு டிரான்சுவர்ல போயிட்டாருடீ …”
“ஏங்க நான்
வேலைக்குப் போவலாமுன்னு இருக்கேன்”
“சரி…”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக