நகரத்தில்
எதிர்
வீட்டில் வசிப்பவர்களை
ஆண்டிற்கு
ஒரு முறை
பார்த்துக்கொள்ள
முடிகிறது
தீபாவளியன்று
அதுவும்
மாலையில்
பட்டாசு
வெடிக்கும்போது!
பேச கூட நேரமிருப்பதில்லை
பட்டாசு வெடிக்கும்போது
கவனத்துடன் வெடிக்க
வேண்டுமே!
அதனால் ஓரிரு வினாடி
மட்டும்
பார்த்துக்கொள்ள
முடிகிறது
ஆனால்
நலம் விசாரிக்க
முடியவில்லை!
இதில் என்ன முரண்பாடு
இருந்துவிடப் போகிறது
பெற்றவர்களைக்
கிராமத்தில்
தவிக்க விட்டுவிட்டு
நாம் மட்டும் சொகுசு
வாழ்க்கை
வாழ முற்பட்டுவிட்டபோது
மனித நேயம் என்ன
வேண்டிகிடக்கு!
மின்னஞ்சலிலும்
முகநூலிலும்
மட்டுமே
தீபாவளி வாழ்த்துகள்
கூறிக்கொள்ளும்
நமக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக