இலைமறைக்காயில்
தனியாகத் தெரிகிறது
கிளியின் அலகு
ஜன்னல் குடையும்
வண்டுகள்
வயிற்றுப் பசி
பூ ஒன்று உதிர்ந்தது
வருத்தத்தில்
அந்தி
(பொழுது) சாய்கிறது
காக்கைக் கூட்டம்
விரைகிறது
பொழுது சாயும் நேரம்
கயிறு இன்றி
ஊஞ்சல் ஆடுகிறது
குரங்கினம்
நள்ளிரவு வராமைக்கு
எரிந்து கொண்டிருக்கிறது
அணைக்கப்படாத தெருவிளக்கு
கையில் புல்லாங்குழல்
இசைக்க மனமில்லை
பாடும் சில்வண்டுகள்
புகை வண்டி
புன்னகையில் கையசைக்கும்
கொடி மல்லி
குழந்தையும் தெய்வமும்
ஒன்றுதான்
திட்டினாலும் சிரிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக