பாப்பாங்க
பேசுவாங்க
முத்தத்தோட எல்லாத்தையும்
இழப்பாங்க
கேட்டா தெய்வீகக் காதல்னு
சொல்வாங்க
அப்ப எல்லாம் தெரியாத
சாதி, அப்பா அம்மா பாசம்
கல்யாணத்துக்கு அப்புறம்
தெரியும்!
கோர்ட் போவாங்க
பிரிஞ்சிருவோமுன்னு சொல்வாங்க!!
அவங்களோட சேர்த்து
எல்லாரும் தலையாட்டிக்குவாங்க!!!
அப்புறமா
ஒருத்தர் சாவாங்க.
இன்னொருத்தருக்கு
மனச்சாட்சி உருத்துமா!
அவங்களும்
தற்கொலைக்கு முயற்சி செய்யறப்ப
இந்த சினிமாவுல
ஈரோயினை ஈரோ காப்பத்துற
மாதிரி
காப்பாத்திட்டாங்களாம்.
இதென்னடா காதல்
“இதுக்குதானே பெத்தவங்க
காதலே வேணாமுன்னு சொல்றோம்”.
இதைப் படித்தும்
காதல் மேல் நம்பிக்கை
வைப்பதால்தான்
காதல் இன்றும் ஏமாற்றிக்கொண்டு
வாழ்கிறது.
கொலையும் தற்கொலையும்
ஆனாலும், வாழ்கிறது
காதல்
இன்னும் சில…
காதல் போயின் மறுமணம்
கற்பிழக்கவில்லை
காதல் விபசாரம் ஒன்றானது
சாதி
சாதித்துக்காட்டியது
காதல் தோற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக