நான்கைந்து
ஆண்டுகள் கழித்து
குழந்தை வரம்
இல்லையென்று
மற்றொருத்தியை
நாடி சென்றாய்.
எனக்கென்னவோ
ஒரு சந்தேகம்.
அந்தக் கோவலனும்
கண்ணகியைப்
பிரியக் காரணம்
குழந்தை வரம்
வேண்டியிருக்குமோ?
உனக்குப்
பிறந்ததுபோன்று
அவனுக்கும்
மணிமேகலை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக