குழந்தை பெத்துக்கிட்டா
அழகு போயிடுமுன்னு
சொல்லியதைக் கேட்டு… பார்த்து…
குடும்பத்துக்குத் தெரியாமல்
கருக்கலைப்பு செய்தாள்!
ஒரு நாள்
கணவனுக்குத் தெரியவர…
‘புருசனோட படுத்தாக்கூடத்தான்
அழகுக் கொறைஞ்சிடும்’ன்னு சொல்லி
விவாகரத்துப் பெற்று
மற்றொருவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பிறிதொரு நாளில்
மனைவியோடும் 3 குழந்தைகளோடும்
அவனை ஒருநாள் பார்க்க…
40 வயதில் இப்படியாகிட்டோமே என்று
வருந்தித்தான் போனாள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக