பக்கத்துவீடு.
அழகுகள் நிறைந்திருக்கும் இடம். என் வீட்டு மாடியில்
நின்று பார்த்தால் அழகாய்த் தெரியும் எதிர் வீட்டுத் தோட்டம். பூச்செடியும் பூக்களும் நிறைந்திருக்கும். நாம் பேச்சுக்குப்
“பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்” என்று சொல்வோமே…
உண்மையாகவே சொல்வேன். அந்தத் தோட்டத்தைப் பார்க்க
ஆயிரம் கண்கள் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டதும் உண்டு. அந்த வீட்டுக்
கல்லூரிப் பெண் – காதலித்ததாக நினைவு. பூக்களைப் பறிக்கும்போது தோட்டம் அழகாக இருக்கும்.
பறித்துச் சென்றபின்னும் அழகாகவே இருக்கும்!
பறித்துவிட்ட காம்பில்
அமர்ந்து அஞ்சலி செய்கிறது
நேற்று தேனருந்திய வண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக