கை அசைத்துவிட்டு
வேகமாய் நகர்கிறாய்
கடைசியாக நீ
திரும்பிப் பார்த்து செல்கையில்!
மெதுவாக
கண்ணீர் எட்டிப் பார்த்திருக்கிறது
நீ
பேசாமல் சென்ற
மீதி வார்த்தைகள்தான்
இந்தக் கவிதைகள்
எந்த நிலையில்
காதலர்களின் மனம்
குளிர்ந்துபோகிறதோ
அதுதான் காதலின் உச்சம்
மற்றதெல்லாம் சொச்சம்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக