உன்னால்
என் ஆசைகள்
கொடிவிட்டு
படர்ந்து பூக்களும் மலர்த்தியது
நீ
அந்த ஆசையை களைபோல்
எளிதாகக் கிள்ளி எறிந்தாய்
என்றோ ஒரு நாள்
பார்த்துக்கொள்கிறோம்
அடிக்கடி
பார்த்துக்கொள்வதாய்
ஒரு நினைவு வந்து போகிறது
கவிதைகளை
இனி
எழுதக்கூடாது என்கிறாய்
சரி
உன்னால்
அழாமல் இருக்க முடியுமா சொல்
நிறுத்திவிடுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக