டிசம்பர் 18, 2011

காதல் தோல்வி கவிதைகள் - 2


© கவியருவி ம. ரமேஷ் - காதல் தோல்வி கவிதைகள்
·      காதலைப் பெற
ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்என்றால்
சரி சொல்லுங்கள்
நான்
காதலைப் பெற
எதை இழக்க வேண்டும்?

·       பூவாதலையா?
அன்பே!
உன்னை  காணாதபோது
பூவாதலையா?
விளையாடுவேன்.
அதிகம்  விழுவது
பூ  தான்!.
எங்கே
நீயாவது  வந்து
கொஞ்சம் 
தலையைக்  காட்டிவிட்டு
போ.

·       ஒரு  முத்தம்  கொடுத்துவிட்டுப்  போ
திரைப்படத்தில்  வரும்
நடிகையைப்  போன்று -
ஒரு  முத்தம்
கொடுத்துவிட்டுப்  போ
அடுத்து  வரும் 
நாயகியின்
கிழிசல்களுக்கு
அது -
ஊசியாகிவிட்டுப்  போகும்.

·       முறையற்ற  காதல்
ஒவ்வொரு  முறையும்
உன்னை  பார்க்கும்போது
கட்டியணைத்து -
முத்தமிட்டு -
இன்றும்
என்னிடத்தில்  இருக்கும்
அன்பை
வெளிப்படுத்தத்  துடிக்கும்  மனது.
என்ன  செய்வது?
அந்த  ஆசைக்கு
முன்னே  தோன்றி  காட்சியளிக்கும்
உன்  கழுத்துத்  தாலி!

·       சுற்றிவளைத்து
வண்ணத்துப்பூச்சிக்கு
அதன்  வண்ணம்  சிறப்பில்லை
பூக்கள்  மீது  அமர்கிறது
ஒரு  மலர்  கண்காட்சியில்
என்னிடம்
சுற்றிவளைத்துச்  சொன்னதின்  பொருள்
இன்றுதான்  விளங்குகிறது.

·       அன்பு சற்று  அதிகம்
உலகில்
அனைத்துமே
சரிசமம்.
காதலில்  மட்டும்
சற்று  அதிகம் -
ஒருவர்மீது
மற்றொருவர்  கொண்ட
அன்பு!

·       பாழாய்ப்போன  இதயம்!
நான்
உன்  இதய  வாசலிலிருந்து
வெளியேறியபோது -
உன் மனத்தில்
வலது  காலை  இடித்துக்கொண்டேன்.
அப்போதும்
உன்  இதயம்  சொல்கிறது:
ஒரு  நிமிடம் -
என்  கண்ணீரை  அருந்திவிட்டு
கவனமான  வெளியேறு!

·       எனக்கான  உலகம் நீ…!
எனக்கான  உலகம்
நீ.
அதில் -
நீ
ஆதாம்.
நான்
ஏவாள்.
(கவிதை  எழுதும்போதே  விலக்கப்பட்ட  கனிப்  பற்றி  எதிர்கேள்வி  வரும்  என  நினைக்கிறேன்அவர்களுக்கான  பதில்  இதோ: விலக்கப்பட்ட  கனி  என்ற  ஒன்று  இருந்ததால்தான்  அதை  உண்டு  பகுத்தறிவு  பெற்றார்கள்அதனால்  சிக்கல்கள்  உண்டானதுஆனால்  காதலுக்கு  மயக்கமே  போதுமானதாக  இருக்கிறதுசிந்திக்கத்  தொடங்கினால்  காதலர்களிடம்  பிணக்குகள்  தோன்றுகின்றனஎனவேஅவள்  உலகத்தில்  நான்   விலக்கப்பட்ட  கனியையும்  பாம்பையும்  படைக்க  விரும்பவில்லை.)

·       தவறான நினைப்பு
துன்பம்  வந்தால் 
சிரிப்பேன்!
எதிரே  வருகிறாய்
சிரிக்கிறேன்!
நினைத்துக்கொள்வாய்:
தோல்வியை  மறந்து
மகிழ்ச்சியாக  இருக்கிறானென்று.


·       உடைந்துபோன இதயம்!
நாம்
விரல்கள்  கோர்த்து
நடந்ததை -
சுட்டுவிரல்  மட்டும்  கோர்த்து
மணவலம்  போகும்போது
நினைத்துப்பார்க்கிறேன்!
உடைந்துபோனது
இதயம்!!

·        நல்லா  இரு
கடைசியாக -
உன்னிடம்  சொல்ல
ஒன்றும்  இல்லை.
நல்லா  இரு

·     முத்தமிட  ஒன்றும் அனுமதி தேவையில்லை!
முத்தமிட  ஒன்றும்
உன்  அனுமதி 
எனக்குத்  தேவையில்லை!
மேல்  உதடு  நீ
கீழ்  உதடு  நான்
நாம்  என்று  உச்சரி
அப்போது  தெரியும்
...   ...    ...   ...

·       ஒவ்வொரு  முறையும்
அவசரமாய்
புறப்பட்டுப்  போய்விடுகிறாய்!
ஒவ்வொரு  முறையும் -
திருமணத்தில்
அவசரப்பட்டதுபோலவே!!

·       உறவு  இல்லாமல்
முதியோர்  இல்லமாய்
அழுகிறது.
என் (இளைஞர்கள்இதயம்
உன்  உறவு  இல்லாமல்.

·       காதலின் கண்ணீர்
நெடுநாள்
கழித்துப்  பார்க்கிறேன்.
உன்  அழகை
யார்  பிடுங்கிப்போனது
என்று  கேட்டால்
அமைதியாகப்  பார்க்கிறாள்.
கண்ணில்  கண்ணீரோடு
என்  கண்களை.

·     கவிதைப்  பேசியவளே!
பூங்காவின்
புல்  தரையில்
நடந்தால்
புல்  உடைந்து 
அழுமே  என்று
கவிதைப்  பேசியவளே!
என்  இதயத்தை
சுக்குநூறாக்கிவிட்டு
இன்று
திரும்பிப்பார்த்து
சிரித்துக்கொண்டு  போகிறாயே!

·     காதல் கைக்குட்டை
கண்ணீர் சிந்தும்போது
நீ வாங்கிக் கொடுத்த
கைக்குட்டைதான் துடைக்கிறது
ஆனால்
உன் கையே துடைப்பதாக
நினைத்துக் கொள்கிறேன்

·       வாழும் காதல்
மழை வருகிறது
கையில் குடை இருக்கிறது
நனைந்து செல்கிறேன்-
ஒரு மழைக்காலத்தில்-
குடைக்குள் வந்தவள்
காதலியாகிப்போனால்.
நம் காதலுக்குச் சாட்சியாய்
உனக்கு நானோ
எனக்கு நீயோதான்
குடைபிடிக்க வேண்டும்
இல்லையெனில்?”
நனைந்தேயிருப்போம்என்றாள்.
அந்த நினைவு-
மின்னலாய் வெட்ட
மழையோடு கண்ணீரிலும் நனைந்து
பள்ளிக்கூடச் சாலையைக் கடக்க-
அவள்:
குழந்தைக்கு மட்டும் குடைப்பிடித்து
தான் நனைந்தே செல்கிறாள்.





டிசம்பர் 16, 2011

நீ மட்டும்தான் அழுகின்றாய் - கஸல்கள்


·       நாம், நம்
கஷ்டங்களை மறைக்க
கற்றுக்கொண்டோம்.
கடவுள்
நாம் பொய் பேசுவதாகக்
கணக்கு வைத்துக்கொள்கிறான்.

·       நீ
துன்பங்களையே பறிமாறிக்கொள்வதால்
நான்
இல்லாத மகிழ்ச்சியை
ஒப்படைக்கின்றேன்
(நீயாவது ஆறுதல் அடைவாய் என்று)

·       உன் கவிதைகளால்
என் குழந்தைகள் மகிழ்ந்தன
மழைக்காலங்களில்
கப்பல் செய்துவிட்டு

·       உனக்கு
ஆறுதல் தேவைப்படும்போதாவது
என்னை
அழைக்கிறாயே!
மகிழ்ச்சிதான்

·       தவித்தாலும் துடித்தாலும்
ரசிக்கிறார்கள்
காதல் கவிதைகளை
ஆனால், காதலி
நீ மட்டும்தான் அழுகின்றாய்