ஏப்ரல் 09, 2016

வேண்டுதல் பலிக்காது!

வேண்டுதல் பலிக்காது!
ஐயனாருக்கு வைத்த பூவிடத்தில்…
உதிர்ந்து நின்ற சருகு

ஏப்ரல் 07, 2016

பூப்பூவாய்...

தோட்டத்தில்
உதிர்ந்து கிடக்கும்
ஒரு பூவில் தெரிகின்றது
நேற்று 
நாம் சந்திக்காததை.

ஐய்யனார்

பல ஆண்டுகளுக்குப் பிறகு
குலத்தோடு கும்பிடுகிறார்கள்…
அதே கோபத்தில் ஐய்யனார்