டிசம்பர் 22, 2015

ஹைக்கூவில் யாத்திகனின் பயணம்...

மார்கழிப் பனி
விளக்குடன் விளையாடும்…
சிறு தும்பியொன்று – ம. ரமேஷ்

வதிலை பிரபா அவர்களின் விளக்கம். –

யாரிவன்? யாத்ரிகனா..? மார்கழிப் பனி வேறு.. பசியோடிருக்கலாம்.. ஆனால் அவன் மனம் தும்பியை அல்லவா ரசிக்கிறது. விளக்குடன் விளையாடும் தும்பி அல்லவா அது.. கணநேரம் இவன் மனசு அந்த விளக்கொளிக்குச் சென்று மீண்டும் திரும்பலாம். சிறு சலனம்.. அதில் மகிழ்ச்சி.. பழையபடி மனதில் அவன் கவலைகள் சேரும்.. மனம் இருளில் மூழ்க நேரிடும்.. ஒவ்வொருவருக்கும் இச் சிறு தும்பி வேண்டும்தான். ஒரு சலனம்.. 'பளிச்' சென்ற ஒரு மகிழ்ச்சி.. வாருங்கள்.. விளக்குடன் விளையாடும் சிறு தும்பியைத் தேடிச் செல்லலாம்.. ஒரு யாத்ரிகனாக.

டிசம்பர் 19, 2015

https://www.facebook.com/groups/TamilHaikuClub/

எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு - ந.க.துறைவன்

VathilaiPraba  அவர்களின் விளக்கம்
பல்வேறு விரிவுகளை விழிகளில் விரியச் செய்யும் கவிதையிது. முதல் வரியின் முதல் வார்த்தையை நீக்கி
"காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு."
என்று வாசிக்கும்போது கவிதை ஒரு வெறுமையை சுட்டுகிறது. யாரும் வராத சூழலில் இருக்கிறது இந்த பெஞ்சு.. பயன்பாடற்ற நிலையில் இருக்கிறதா எனவும் தோன்றுகிறது. விட்டுச் சென்ற உரையாடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்குமே.. எப்படி தனிமை வரும்? பூக்கள் சொரிந்து கிடக்குமே.. எப்படி தனிமை வரும்? ஒரு இணக்கமான சூழலை இந்த பெஞ்சுகள் தரும்தான்.. அவர்களுக்கான காத்திருத்தல்தான் இந்த காலியான பெஞ்சு.. வாருங்கள் நாமும் இந்த பெஞ்சில் உட்காரலாம்.. கவிதைகள் கூட நம்மில் .உரையாடலாம்..
ஆனால், கவிஞர்.. இப்படி எழுதுகிறார்...
"எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
மரத்தின் கீழ் தனிமையில்
காலியான பெஞ்சு."
முதல் வரியில் எல்லோருக்காகவும் என எழுதுகிறார்.. இந்த காலி பெஞ்சுக்குக்கூட ஒரு தாயன்பு இருக்கிறது பாருங்கள்... வெறுமையோ, தனிமையோ, குறியீடாக பெஞ்சு .இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வரலாம். அமரலாம்.
- நன்றி வதிலைபிரபா.

டிசம்பர் 16, 2015

டாஸ்மாக் லோடு...

விதிமீறி நிறுத்திய வாகனங்கள்
அபராதம் வசூலித்தார்கள்; 10 அடி தள்ளி
பாதுகாப்போடு டாஸ்மாக் லோடு இறக்கம்

டிசம்பர் 11, 2015

டாஸ்மாக்

காலை 10 மணி வரையிலும்
எரியும் விளக்குகள்
டாஸ்மாக்  முன்பு

டிசம்பர் 06, 2015

அம்மா படமும் கட்சி சின்னமும்

இருவர் நிவாரணம் கொடுக்க
நான்கு பேர் கைகளில்...

அம்மா படமும் கட்சி சின்னமும்.

டிசம்பர் 03, 2015

சென்னை - வெள்ளக்காடு…

மழை… வெள்ளம்… மழை வெள்ளம்… எத்தனை சண்டை… எத்தனை எத்தனை எதிர் பேச்சு… என்று இருந்தவர்கள்தான் இன்று… முட்டியளவு தண்ணீர் வீட்டிற்குள் நுழைந்ததும்… முகம்பார்த்து பேசாத எதிர்வீட்டார்கள் வா… வந்துவிடு என் வீட்டிற்கு… என பகை… பேச்சு… எல்லாவற்றையும் மறந்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்… பலரும் பல நிலைகளில் உயிரையே காத்துவருகிறார்கள்… சாதி… மதம்… இனம் என்று பாராமல்… மனிதநேயம் செத்துவிட வில்லை… மழைக்கு நன்றியென்றாலும் மழையே நின்றுவிடு!

அரசு எவ்வளவு செய்யும்!
நின்று கொல்லும் தெய்வம்!
மனிதனுக்கு மனிதன்தான் உயிர்.

டிசம்பர் 02, 2015

தண்ணியில்லா காடு...

ப்ளிஸ் சார்… ப்ளிஸ் சார்…
தண்ணியில்லா காடுன்னு மிரட்டுவீங்களே…
ப்ளிஸ்… மாத்திடுங்க சார்…

டிசம்பர் 01, 2015

ஏரிகள் உடைப்பு

ஏரிகள் உடைப்பு
வீணாகும் பல டிஎம்சி தண்ணீர்
மழைநீர் சேகரிப்பு தொட்டி?