ஜூலை 04, 2016

பழமொன்ரியு... கூழானாலும் குளித்து...

குளித்தப்பின் பார்த்தேன்
சுத்தமாயிருந்தது…
சட்டியிலிருந்த கூழ்

சில ஹைக்கூக்கள்

நான் ரசித்த சில ஹைக்கூக்கள்:
சருகுகள் உதிரும்
மொட்டையாய் மரங்கள்
வசந்தகாலம் வருகிறது (வதிலை பிரபா, தீ, ப.52)
வசந்தத்தைக் காண
அலங்கரித்து நிற்கின்றன
மரம், செடி, கொடிகள் (வீ.தங்கராஜ், ஹைக்கூ வானம், ப.63)
குளிர்காயும் சிறுவர்கள்
மரத்திலிருந்து விழுகிறது
தீக்குள் பனித்துளி! (அ.தனபால், மீன் உடைத்த நிலா, ப.53)
குளிர் தாங்காமல்
தண்ணீரும் புகைத்தது
பனிபெய்யும் காலை
(சோலை. இசைக்குயில், சூரியனுக்கு வெட்கமில்லை, ப. 12)
குளிர்கால இரவு
போர்வைத் தேடும் மனிதன்
குளிக்கும் மலர்கள் (கன்னிக்கோவில் இராஜா, தொப்புள் கொடி, ப.27)
மார்கழிப் பனி்
நடுநடுங்கி ஒலிக்கிறது
கீறல் விழுந்த திருப்பாவை (ம.ரமேஷ், பனித்துளியில் பனைமரம், ப.34)
தள்ளு வண்டியில்
சிவப்பு பிறை நிலாக்கள்
தர்பூசணி (சொ.சரவணபவன், மின்னல் முகங்கள், ப.43)
அரச மரம்
தனிமையில் பிள்ளையார்
குளத்துப் பூக்களுக்கு வெட்கம் (ஆரிசன், குளத்தில் மிதக்கும் தீபங்கள், ப.29)
ஆடை அலங்காரம் அம்மனுக்கு
நைந்துபோன துண்டோடு
கோயில் பூசாரி (வானவன், மகரந்த துகள்கள், ப.29)
ஏழைகளின்
குழந்தைகள் காப்பகம்
மரநிழல் (மரிய தெரெசா, துளிப்பா தோப்பு, ப.48)
கழுகின் கள்ளப் பார்வை
பெருத்த கோழி
இறக்கைக்குள் திமிறும் குஞ்சுகள் (மு.முருகேஷ், என் இனிய ஹைக்கூ, ப.118)