ஜனவரி 14, 2016

'உள்ளாடையா? மேலாடையா?'

அந்தப் பாடல்காட்சி
அழகாயிருந்தது…
'உள்ளாடையா? மேலாடையா?'


ஜனவரி 12, 2016

இதுதான் ஹைக்கூ...

"என்ன அவசரம்?
அடுத்தமுறை பார்த்துக்கொள்வேன்...
குறிஞ்சிப் பூவை!" - ம. ரமேஷ்

https://www.facebook.com/groups/TamilHaikuClub/ 
வதிலை பிரபா அவர்களின் விளக்கம் - 
இருக்கலாம்.. பூ பூப்பது அதன் இயல்பு.. அந்த இயல்பு மாறாமல் பூக்கலாம் மீண்டுமாய்.. ஜென்னில் இயல்பை இயல்பாக விடுவதும் உண்டு.. மரணத்தை இயல்பாக எடுத்துக் கொள்வது மாதிரி.. 

இரண்டாம் வரியில் "அடுத்தமுறை பார்த்துக் கொள்வேன்" என்றிருப்பது தொடரும் பயணத்தைக் குறிக்கிறதா என்ன? இங்கே இந்த யாத்ரிகன் தன் பயணத்தை தொடர்கிறதும், முடித்துக் கொள்வதும் அவன் இயல்பாய் வருடுகிற மரணத்தின் நிஜம்..


"என்ன அவசரம்
அடுத்தமுறை பார்த்துக் கொள்வேன்"
என சொல்லும்போதே புரிந்து விடுகிறது.. உள்ளுக்குள் எழும் மரண வதை. இந்த வதை இன்னும் கூடுதலாக அவனுள் நம்பிக்கையைத் தரும்தான்.. 


மூன்றாவது வரியில்..
"குறிஞ்சிப் பூவை"
எனும்போது அவன் நம்பிக்கை இன்னமும் அதிகரிக்கிறது.. குறிஞ்சிப் பூ 12 ஆண்டுக்கொருமுறை பூக்குமென்று தெரியும் அவனுக்கு.. நாட்களை நகர்த்துகிறவன், ஆண்டுகளில் நம்பிக்கை வைக்கிறான்.. இந்தப் பயணம்தான் எத்தனை எத்தனை செய்திகளைத் தருகிறது நமக்கு.. 


மொத்தத்தில் கலங்காதிரு மனமே என்கிறதோ கவிதை.
கவிஞனின் அகத்திலிருந்து எரியும் அகல்விளக்கின் வெளிச்சம் பரவுகிறது பாருங்கள்.. அதோ.. சலனமின்றி ஒரு புதிய பாதை புலப்படுகிறது... அந்த மரண வதையையும் தாண்டி..  அருமை ரமேஷ்..

ஜனவரி 04, 2016

மாமழை போற்றுதூஉம்... அழிப்பதூஉம்...

Jothi Jothi
1. நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.

2. உலையில்லை வலையில்லை/
மகிழ்வில் மீனவர்/
படகில் மக்கள்/

3. வெள்ளம்
செழிப்பாக்குகிறது
ஊழல்அதிகாரிகளை

4. ஊரே வெள்ளம்
உறக்கம் தொலைத்தனர்
அரசியல்வாதிகள்

5. வெள்ளப்பெருக்கு
துளித்துளியாய் சேர்கிறது/
நிவாரணநிதி/

Tkeshav Tkeshav
1. காப்பாற்ற துடிக்கும் கணவன்
கண்முன்னே மூழ்கும் மனைவி
வீட்டுக்குள் மழைவெள்ளம்

2. வெள்ளத்தில் அனாதை பிணம்
உரிமையாய் 100பேர்
வெள்ள நிவாரணம்

3. உயிர் தப்ப கடைசிமாடிக்கு
ஓட்டமாய்
படி ஏறிவரும் வெள்ளம்

4. ஓட்டுக்கு பணம்
கட்சிகள் பகிங்கிரமாக
வெள்ள நிவாரணம்

5. விவசாயி அழுகிறான்
அணைகடந்தவெள்ளம்
திரும்புமா?

Rajan Raj
1. வானவில்லின் திசை நோக்கி
பறக்கிறது
மழையில் நனைந்த பட்டாம்பூச்சி

2. செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு

3. ஏழை வீட்டில் வெள்ளம்
அதிகாரி வீட்டில் புகுந்துவிட்டது...
நிவாரணம்

4. கடவுளுக்கு நிவாரணம்
கொடுத்தது அரசாங்கம்
வெள்ளத்தில் போனது கோயில்

5. ஜன்னலோரத்தில் கரைகிறது
குழந்தை வரைந்த...
வானவில்

ஜனவரி 03, 2016

மழை - வெள்ளம் - பேரழிவு - அரசியல்

https://www.facebook.com/groups/haikusenryuworld/

•Jothi Jothi - நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.
•Tkeshav Tkeshav -காப்பாற்ற துடிக்கும் கணவன்
கண்முன்னே மூழ்கும் மனைவி
வீட்டுக்குள் மழைவெள்ளம்
•Rajan Raj - செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு
•விஜயகுமார் வேல்முருகன் -பத்திரமாக சேகரிக்கப்படுகிறது
நிவாரணப் பொருட்கள்..
விற்பனைக்கு..!
•Dhakshan Haiku - மழை வெள்ளத்தால்
கன்னத்தில் கைவைத்த சிறுவன்
கவிழ்ந்தது காகித கப்பல்.
•Sivakumar Sivakumar -சுத்தப்படுத்திய மழைக்கு
நன்றி சொன்னது
கூவம்!
•RRavi Ravi -சாலையை எரியாக்கியது
ஏரியில் இடமில்லாததால்
மழை !
•Ssprabhu Ssp -இழுத்து சென்ற வெள்ளம்...
விட்டுச் சென்றிருந்தது,
தொலைந்திருந்த மனிதம்.
•கவிஞர் வீரா -வடியும் வெள்ளம்
திரும்பவில்லை
தொட்டிலில் மீன்கள்
•மகிழ்நன் மறைக்காடு -
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு/
வெள்ளப் பாதிப்பும் ஒருநாள்/
மெல்ல மறையும் நம்பு.
•விஜயகுமார் வேல்முருகன் -
நிவாரணம் வாங்குவோர் ஒருபுறம்
அதை திருடி பதுக்க காத்திருக்கும்
மனசாட்சியிலா கூட்டம் மறுபுறம். !
•Dhakshan Haiku -
இரவுநேர மழையால்
தூக்கமில்லாச் சிறுவன்
தொலைந்துபோன நாய்குட்டி.
•Vanarajan N -
வெள்ள நிவாரணம்
பெற்றுச் செல்கின்றன
மதுக்கடைகள்!
•Gnanasoory Suganya -
வருத்தத்தில் இருக்கிறதோ வருணன்?
பெரும் மழையாகி பிரியாவிடை தருகிறதே
ஓய்வு பெறுகிறார் இரமணன்!
•S Naga Lingam -வெள்ளம்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது
முந்தைய ஊழலை
•முல்லை நாச்சியார் -சுதந்திரமாக பறந்த பட்டாம்பூச்சி
முதுகில் சுமையாகி விட்டது
மழைநீரின் ஒரு துளி
•Raja Kumaran -
மழைத்துளி வெள்ளமாச்சு
சாதிமதம் கூடி வந்து
மனித அன்பு மலரலாச்சு
•NeelakandanSirkali -மழையழகு பெருமழைப் பேரழகு/
மலை,காடு கழனி,கடல் நீர்நிலையில்/
வீட்டில் வீதியில் பேரழிவு!
•Dhakshan Haiku -
வெட்டிய மரத்திற்காக
பழிதீர்த்ததோ மழை?
நனைந்த கோடரியில் துரு
•Vanarajan N -சென்ரியு
மாடி வீடுகளில் வெள்ளம்
ஊடகங்களால் மறைந்து போனது
குடிசைவீடுகளின் சுவடுகள்
•கவிஞர் வாலிதாசன் -நிரம்பி இருக்கிறது
ஏரி குளங்களில்
குடிசை வீடுகள்
•வந்தை ஆறு -
மழை சத்தத்தின் ஊடே
மனதை கிழிக்கறது...
மழலையின் சத்தம்
•வெற்றிப்பேரொளி- மெத்தையில்
உறங்கிக்கொண்டிருக்கிறது
வெள்ளநீர்!
•alimuthu Suka -
துணித்துண்டுகளாய் மனிதர்கள்
தைத்து ஆடையாக்கியது
மழை ஊசி