மே 25, 2010

குறட்கூ கவிதைகள்

புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. என்னுடைய குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து என்னுடைய இக் குறட்கூ வகைக் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும் மகிழ்கிறேன்.

 
காதலுக்குக் கண்ணில்லை

கண்ணீர் உண்டு


 
எல்லா ஊரும்

நம் ஊரில்லை


 
கடமையைச் செய்

பலனை எதிர்பார்


 
தாலியில்லாமல் தொட்டபோது

காதல் செத்துப்போனது


 
உருக்கொடுத்து சிலையாக்கியதும்

கல்லாகிப்போனான் இறைவன்

 
நடிகைகளிடம் போட்டி

ஆடை குறைப்பதற்கு


  காதல் வானில்

நட்சத்திரங்களாய் தடைகள்



கன்னித்தமிழ் கற்பிழந்தது

ஆங்கிலக் கலப்பு



காதல் அழகானது

வாழ்க்கைப் பாழானது



பட்டம் இருக்கிறது

நூல் இல்லை



என் வீட்டுக்கதவை

நான் தாழிட்டதில்லை



சொர்கத்தையும் நரகத்தையும்

காட்டுகிறது காதல்



பூக்களின் அழகு

ஆடையுடுத்துதலில் இருக்கிறது



சிறையில் என்ன?

என்பதே இல்லை



உன்னால் தகர்ந்தது

இறைவனின் கனவு



சண்டை போடுகிறது

உண்டியலில் பணக்கட்டுகள்



எழுதாதக் கவிதைகள்

அரும்பாத மொட்டுக்கள்



காதலில் விழுந்தேன்

அடிப்படவில்லை வலிக்கிறது



நீ குற்றவாளி

வெட்கப்படாமல் சிரிக்கிறாய்



நேரம்போத வில்லை

உன்னை நினைப்பதற்கு



காதலுக்குத் தாகம்

கண்ணீர் கொடு



மலர்கள் வாடுகிறது

பூக்காரி சிரிக்கிறாள்



உன் நினைவுகள்

உண்டியல் காசு



தண்ணீர் ஓடவில்லை

ஆறு ஆறுதான்



காதல் தோல்வி

அறுசுவை விருந்து



என் பட்டினியைப்

பசி அறியவில்லை



நான் குற்றவாளி

நீ சிறைச்சாலை



பயணம் ஒன்றுதான்

பாதைகள்தான் வேறுவேறு



நான் ஊமையானேன்

பூக்கள் பேசியது



காதல் கதை

விளக்கைத்தேடும் விட்டில்



வண்டுகள் மொய்க்க

பூதான் காரணம்



முள்களை எடுக்க

முள்ளைத் தேடுகிறேன்



காதல் கவிதைகளுக்கு

முற்றுப்புள்ளி இல்லை



நீயும் அங்கில்லை

நானும் இங்கில்லை



நான் பயணி

காதல் பாதை



மயானச் சந்தையில்

காதலர்களின் இரைச்சல்



காதல் நினைவுகள்

ஜன்னலோரப் பயணம்



கூவத்தில் வெழுக்கிறேன்

இறைவனின் ஆடைகளை



கவிதையையும் காதலையும்

காவடியாகச் சுமக்கிறேன்



நம் காதல்

கருச்சிதைவு ஆகிவிட்டது



ரோஜாவுக்கு முள்

காதலிக்குக் காதலன்



மின்னலின் தோலுக்கு

கண்சிமிட்டுகிறது நட்சத்திரங்கள்



பூக்களைப் பறிக்காதீர்கள்
தொலைவில் வண்டுகள்


 
குறை குடம்

காதலர் மரணம்


 
காதலர்கள் திருமணம்

பெற்றவர்கள் செய்தித்தாளில்



சமய போதனைகள்

பாவம் பக்தர்கள்





தலைவாரிப் பூச்சூட்டினேன்

பேன்பார்த்தேன் பொம்மைக்கு



கந்துவட்டி தடைச்சட்டம்

கோயிலில் உண்டியல்!



ஈர்த்து எரிக்கிறது

கோயில்தீபம் விட்டில்களை



காது செவிடாகிவிட்டது

பக்தர்களிடம் கடவுள்


  வைத்தது முற்றுப்புள்ளி

போடப்போவது கோலம்



கொடிகட்டிப் பறக்கிறது

நடிகைகளின் மேலாடை

 ஐந்துஆறு முழம்பூ

சுமைதாங்காமல் இதயம்



வலக்கண் அழுவது

இடக்கண் அறியாதிருக்கட்டும்



புல்மேல் பனித்துளி

உன்மேல் அழகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக