உருவக
கதைக் கவிதை
காக்கைக்கும்
நரிக்கும் அதே தொல்லை.
காக்கை
வடையைவிட மனமில்லை
நரிக்கும்
கேட்காமலிருக்க வெட்கமில்லை.
காக்கை
அஃறிணை என்பதாலோ என்னவோ
இன்னும்
வடையைத் தின்றபாடில்லை
நரியும்
அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.
அவ்விடம்
வந்த வேடன்
நரியை
பிடித்துச் சென்றான்.
நரிக்கு
நல்லா வேணும் என்று நினைத்தபோது
வேடன்
ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.
காக்கை
வாயிலிருந்த வடை கீழே விழு
எறும்புகள்
தின்று முடித்தது.