மே 16, 2010

காதல் கவிதைகள்


•என்
தலைவிதி
உன்
தலை வகிடுபோல்
நேராக
உன்னிடம் வந்து
முடிகிறது


உன்னிடமிருந்து...
எப்பொழுதாவது
ஒரு கடிதம்...
என்றாவது ஒரு
தொலைபேசி அழைப்பு...
ஆயுள் முடிவதற்குள்
ஒரு சந்திப்பு...
இவைகளில்
ஒன்றுக்காவது வாய்ப்பு கொடு
என் முதல் காதலியே!


•ஆறடிக் கூந்தலில்
ஆறு முழம் பூ
அழகாய்தான் இருக்கிறது
ஆனால்
அதன் சுமை தாங்காமல்
என் இதயம்


•இன்று
உன்னை நினைத்தாலும்
தலையறுத்தச் சேவலாய்
துடிக்கிறது
என் நெஞ்சு

•உன்னிடம்
கற்றுக் கொண்ட
காதலுக்காக
என் இதயத்தை
குருதட்சனையாக
ஏற்றுக்கொள்

•என் நினைவுகள்
உன் மடிமேல்
நீ
தலைகோத
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது

•நீ அகப்படாததால்
என்
இதயம்
தூண்டில் புழுவாய்த்
தவிக்கிறது

•என் உயிர் நீ
 

எனக்கு மரணம் இல்லை
நான் தான் நீ
நீ தான் நான்
ஒன்றை விட்டு ஒன்று பிரியாது
ஒரு சமயம்
என் மூச்சுக் காற்று
நின்று போனால்
நினைத்துக் கொள்வேன்
இவ்வுலகில்
நீ இல்லை என்று

•துன்பத்தில் இன்பம்
பிரிந்திருந்து
கஷ்டப்படுவதைவிட
வா, காதலி
திருமணம் செய்துகொண்டு
கஷ்டப்படுவோம்
இருவரும்
இணைந்து விட்டோம் என்ற
நிம்மதியாவது இருக்கட்டும்

•காதலியின் காதல்
நான்
காதலியைத் தொலைத்து விட்டேன்
யாராவது
திருமணம் செய்துகொண்டிருந்தால்
அவளிடமிருந்து
என் 'காதலை' மட்டும்
திரும்ப வாங்கி வந்து
எனது கல்லரையில்
சேர்த்து விடுங்கள்
புண்ணியம் கிடைக்கும்
உங்களுக்கு

•காதலின் பொய்
உன்னை நினைத்து
அழும் இரவுகளில்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது
அம்மாவுக்கு
வயிற்றுவலி என்றோ...
தலைவலி என்றோ...

•எதிர் பாராத கேள்வி
தொலைந்த
காதலியிடம்
ஆயிரம் கேள்விகள்
கேட்கப் போனேன்
அவள்
ஒரே கேள்விதான் கேட்டால்
'யான்டா என்ன அழவெச்ச'?

•காதல் குருடர்கள்
'காதலுக்குக்
கண் இல்லை'யென்று
தெரிந்தும் கூட
வாழ்க்கையில்
கை கோர்த்து
நடக்கத் தெரியவில்லை
காதலர்க்கு...

•ஏமாற்றம்

 
மழைத் தூரலில்
நனையப் பிரியம் என்றாய்
நான்
நனைந்து கொண்டிருக்கிறேன்.
நீ
குடைபிடித்துக்கொண்டு போகிறாய்…

•காதலியின் வேண்டுதல்
காதலனே
எனக்காக
உன் உயிர் வேண்டாம்
என் காதலை
மட்டும்
விட்டுக்கொடு
அது போதும் எனக்கு

•முதல் தோல்வி
என்
முதல் தோல்வி
குட்டிப் போடும் என்று
மயில் இறகை
புத்தகங்களுக்கிடையே
வளர்த்தது!

•தேடல் புதிது
நாம்
ஒரு நாள் முழுவதும்
தேடி அலைந்தோம்
எங்கேயோ போய்
ஒளிந்துகொண்டது
மரணம்.
தப்பித்தேன்
நான்.
பிழைத்தாய்
நீ.

•புது சாக்கு
நீ
நலம் விசாரிக்க
வருவாய் என்றுதான்
படுத்துக்கொண்டிருக்கிறேன்
காய்ச்சல்
நீங்கியப் பின்பும்.

•நினைவின் முடிவு
வளரும் நாட்களில்
ஒரு நாள்
சோர்வுற்று
உன்னை
நினைக்க மறந்திருந்தால்
புள் முளைத்த
நிலத்திற்குள்
கனவின்
பூப்பறிக்கச் சென்றிருப்பேன்

•நம்பினால் நம்புங்கள்
தலைதீபாவளிக்கு வந்திருந்தாள்
புஸ்வானமாக்கி விட்டுப் போனவள்
சரவெடி வெடிக்க...
பற்றவைக்கும்போது கூட
என் நெஞ்சு
புகைந்து கொண்டுதான் இருந்து
என்னவாகிவிடுமோ என்று
பயந்து
கண் மூடி திறந்தபோது
என் மனசு போல
அவள் கையில் இருந்த
நெருப்பும்
அணைந்திருந்தது!


•காதலி!
நீ
எனக்கு
காதலியானவள் அல்ல
கவிதையானவள்.
என் ஒரு கவிதையையும்
நீ படிக்க முடியாத போது
என் கவிதைக்கு என்ன மதிப்பு
எழுதியக் கவிதைகளை
அழித்து விடுகிறேன்.
நீ
எனக்கு
காதலியானவள் அல்ல
கவிதையானவள்.
என் ஒரு கவிதையையும்
நீ படிக்க முடியாத போது
என் கவிதைக்கு என்ன மதிப்பு



•இனி அவள் அப்படிதான்
உன் வீதி வழியே
கடந்து சென்றபோது
என் பாடையிலிருந்து
உதிர்ந்த பூக்களை
தெருவே கூட்டிப் பெறுக்கிக்
குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டது.
நீ மட்டும் இன்னும்
வாசலை கூட்டாமல் இருக்கின்றாய்.


•அவசரம்...
கல்லரையிலும்
உன் நினைவுகளின்றி
தூங்க முடியவில்லை
அவசரப் பட்டுவிட்டேனா?


•காதல் சோறு
இறந்த
என் காதலுக்கு
சோறு வைத்தேன்
எந்தக் காக்கையும்
சோறு எடுக்க வரவில்லை

• உண்மை பொய்
 

காதலியோடு சுற்றுலா சென்றேன்
காடு மலை அருவி சோலை
என்று ரசித்தவள் சொன்னாள்:
எவ்வளவு அழகு! என்று
நான் சொன்னேன்:
அழகு தான்
ஆனால்
உன்னைப்போல்
பேசுவதில்லையே என்று


• எமனின் ஏமாற்றம்
என் உயிரை
எடுக்க வந்த
எமன்
வெறும் கையோடு
திரும்பிப் போனன்.
காதலி
என் உயிரை
எப்போதோ
எடுத்துச் சென்று விட்டதால்!


• வானவில் சோறு
ஒரு மழைக்கால இரவில்
நமக்கு மட்டுமே தெரிந்த
அந்த வானவில்-
ஆறு ஆண்டுகள் கழித்து
நேற்றைய மழை இரவில்
காட்சியளித்ததை கவனித்திருப்பாளா?
ஆம் காதலா!
என் குழந்தைக்கு
அதைக் காட்டிதான்
வானவில் சோறு ஊட்டினேன்.


• மெரினாக் காதல்
ஒரு சமயம்
கடல் அலைகளைப்
பார்த்துப் பார்த்து
கற்றுக் கொண்டிருப்பாளோ?
என்னை
ஏமாற்றி விட்டுப் போக!


• காதல் கல்லறைகள்
பற்றும்-
பாசமும்-
அன்பாய்
அடித்துக் கொண்டு
அழுகின்றது
கல்லரையில்.


• காதல் கெட்டுப் போவதில்லை
கப்பலேறிய மானம்
கரை கடந்தது
காதலர் பிணம்...
தெய்விகக் காதல்
கோயிலுள்
காதலர் பிணம்...
பெற்றோரே
கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்
காதலர்கள்
கெட்டுப் போவதில்லை.

1 கருத்து: