டிசம்பர் 15, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 23

பொங்கல் திருநாள் - மாக்கோலம்
பசியாறும் எறும்புகள்
மிதித்துவிளையாடும் சிறுவர்கள்

இன்று அரிசி மாவில் கோலம் போடுவது என்பது அரிதே. இருப்பினும் சிலர் போடுகின்றார்கள். பொங்கல் திருநாள் விசேஷம் என்பதால் அரிசி மாவில் கோலம் போட்டு இருக்கின்றார்கள். அதை எறும்புகள் தின்று பசியாறிக்கொண்டிருக்கின்றன… சில எறும்புகள் சேமிக்க எடுத்து கொண்டும் சென்றிருக்கும்… செல்லும்… மூன்றாம் அடியில் மிதித்து விளையாடும் சிறுவர்கள் என்று இருக்கின்றது. மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் எறும்புகளை கவனிக்கமாட்டாடர்கள் என்பதை நாம் அறிந்ததே. அப்போது சில எறும்புகள் இறக்கும். என்னுடைய (தாய் மனதின்) கவலையெல்லாம் என்னவென்றால்…  அந்த எறும்புகள் சிறுவர்களைக் கடித்துவிடுமோ என்பதுதான்.

பொங்கல் திருநாள் - மாக்கோலம்
பசியாறும் எறும்புகள்
மிதித்துவிளையாடும் சிறுவர்கள் – ம. ரமேஷ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக