பிப்ரவரி 27, 2015

அந்த ‘அம்மாவும் அப்பாவும்’

எல்லோரும்
கூட்டம் கூட்டமாகக்
கத்தியோடு புறப்பட்டார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள்
வெட்டிச் சாய்த்ததை
சாலைகளின் ஓரத்தில் வைத்து
அரசியல் கொடிகளை
அதில் கட்டி பறக்கவிட்டார்கள்.
தமிழகம் முழுவதும் இதுதான் நிலை.
என்ன வேடிக்கையென்றால்
அந்த ‘அம்மாவும் அப்பாவும்’ மரக்கன்றுகளை
நடச்சொல்கிறார்கள்.
வளர்ந்ததும்
வெட்டத்தான் இருக்குமோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக