ஜூன் 28, 2016

சுவாதி கண் திறந்தேயிருக்கிறாள்…

அவன் கத்தியோடு இருந்தபோதுதான்
எவருக்கும் தடுக்கும் துணிவில்லை
கத்தியைத் தூக்கியெறிந்த பின்னாவது
யாராவது ஒருவர்
அவன்மீது கல்லெறிந்திருக்கலாமே…
சரி… விடுங்கள்…
நான் உங்கள்
அக்காவோ தங்கையோ
இல்லைதானே?

கோழை அவன்!
என் முன்னால் வந்து வெட்டியிருந்தால்
நானாகிலும் போராடித் தடுத்து
முடியாமல் போனபோது செத்திருப்பேன்.

அடுத்தொருத்தியை வெட்டும்போது
ஆண்மையும் துணிவுமிருந்தால்
முன்னால் வந்து வெட்டுங்கள்.

ஒரு சமயம் அவ்விடத்தில்
பெண்ணொருத்தி இருந்திருந்தாள்
அவள் கத்தி கூச்சலிட்டிருப்பாள்…
நீங்கள் ஆண்கள் என்ன செய்வீர்கள்?

பார்க்கத்தான் கண் திறந்தேயிருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக