இருபத்து மூன்றில்
ஒன்று... இரண்டு... மூன்றென...
ஒரு நாளைக்குத் தொடங்கியது.
பணத்தாசையோடு
உடற்சுகமும் சேர
இருபத்தைந்தில் நான்காகிப்போனது...
இப்படியே வயதும் ஐம்பதாகிப்போனது!
இப்போழுதாவது
உண்மையை ஒப்புகொள்கிறேன்.
இல்லை என்றாள் நான்
மனசாட்சியைக் கொன்றவளாகி விடுவேன்.
“உடலை மட்டுமே விற்கிறேன்
கற்பை அல்ல” என்றால்
அது பொய்.
எத்தனை ஆயிரம் பேரிடம்
உடற்சுகம் கண்டு
கற்பை இழந்திருக்கிறேன்!
“கணவனோடு இருக்கப் பட்டவளுக்கு
ஒரு கற்பு.
என்னைப் போன்றவளுக்கு
படுத்தெழும் போதெல்லாம்
புதிது புதிதாய் ஒரு கற்பு.”
கல்லுக்குள் ஈரம்
விபச்சாரிக்குள் கற்பு
வீண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக