நவம்பர் 22, 2012

ம. ரமேஷ் ஹைக்கூ


அமர இடமில்லை
நகரத்தில் வருந்தும்
பனித்துளிகள்

விசித்திரம்
கனவில்லா இரவு
மரணம்

காற்றின்
போக்குக்குப் போகும்
கையில் நூலிருந்தும் பட்டம்

ஒன்றும் அறியாததுபோல
மறுநாள் வீசும் காற்று
புயல் ஓய்ந்த கடற்கரை

ஓடைநீர்
சலசலக்கிறது
மேடு பள்ளம்

சிறகடிக்கும்
சிட்டுக்குருவி
தொடரும் பருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக