காலையிலேயே
யார் அடித்திருப்பார்கள்?
சிவந்திருக்கும் ரோஜா
காயம் அடையாமல்
தேனெடுக்கும் வண்டுகள்
ரோஜா தோட்டம்
பொட்டிழந்தவள் விற்கிறாள்
பூக்களை யாரும் வாங்கவில்லை
கடற்கரையில் நுரைப்பூக்கள்
முன்பின்
அறிமுகமில்லை
சிரிக்கும் குழந்தை
என்னென்ன ஆசையோ
சொல்ல வாய்த் திறக்கும்
பிஞ்சுக் குழந்தை
கை வீசி
நடக்கும் காற்று
புயல்
விளையாடும் அணில்
உண்டிவில்லோடு
இளமைக்கால நினைவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக