ஒரு காளான்
புதர் மறைவில்
நூறு காளான்கள்
சாலைக்கு
தாகம் தீர்ந்தது
கானல் நீர்
தவளைகள் சப்தம்
தாலாட்டில் உறங்கும்
பாம்புகள்
மழைக்கால இரவு
பாவம்…
நனைந்திருக்குமா?
குளத்தில் நிலவு
மானைத் துரத்திய
சிங்கம் நின்றது
அடுத்த அடியில் எறும்புகள்
மாலை நேரம்
வீசும் காற்று
படுத்துறங்கும் பாறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக