ஏப்ரல் 07, 2013

கவியருவி ம. ரமேஷ் ஹைபுன் – 17


தலையைக் குளிப்பித்து
முகம் திருத்தி
புதுசட்டை அணிவித்து முடிக்கிறார்கள்.
கூட்டம்தான் ஏனோ
ஒப்பாரி வைக்கிறது.
இறந்தவைரை
இனி எப்போது காணப்போகிறோமென்று
சண்டையிட்டு பிரிந்த
பங்காளிகள்கூட வந்திருக்கிறார்கள்.
“இப்பவாச்சும் வந்தீங்களே” என்று
கணவனை இழந்த மனைவி
நிம்மதியடைந்தார்!
பாடையை
தோள்களில் சுமக்கிறார்கள்
அவளுக்குப் பாரம் கூடிப்போனது.

ஒருவரே
சுமந்து செல்லும் படை!

தோளில் காவல் பொம்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக