சிறு வயதில்
புத்தகங்களுக்கிடையே
மயிலிறகு
காதல் பருவத்தில்
புத்தகத்திற்குள்
அவள் கூந்தல் மலர்கள்
இரண்டும் வீண்தான்
கொஞ்சம்
கொஞ்சமாய்
கசக்கின்றன
உன் நினைவுகள்
எந்த உலகத்தில்
இருக்கிறாய் என்று கேட்கிறார்கள்
காதல்
தனி உலகம்தான் போல
அங்கு
மகிழ்ச்சி மட்டுமே உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக