கல்யாண
வரவேற்பு தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. எல்லாம் முடிந்து உறங்கி எழுந்தார்கள். திரைப்பட
பாணியில் மணப்பெண் காதலனோடு ஓடிவிட்டாள் என்று மண்டபத்தில் ஒரே பேச்சு. மண்டபம் அல்லோலப்பட்டது.
‘சனியன் இப்படிச் செஞ்சிபுட்டாளே நீதான் கண்ணு நம்ம குடும்ப மானத்தைக் காப்பாத்தனுமுன்னு’
ஓடிப்போனவளின் தங்கையின் காலில் விழுந்து கொஞ்சி சம்மதம் வாங்கிவிட்டார்கள். மாப்பிள்ளை
பெருந்தன்மையோடு சம்மதித்தான். அவள் கழுத்தில் தாலி கட்ட கொட்டப்பட்ட கெட்டிமேள தாளத்தில்,
அக்காவின் திருமணத்தைச் சாக்காக வைத்து அழைத்திருந்த கல்லூரிக் காதலன் அழுதுகொண்டான்.
யார் காதலில் ஜெயித்தது?
ஆயிரங்காலத்துப்
பயிர்
பிடுங்கி
நடப்படுகிறது
வாடி
வதங்கிப்போனது மனசு
இப்படியும் எழுதலாம் என்பதற்காகச் சில…
எல்லாம்
முடிந்தபின்
வருந்துகிறார்கள்
மனிதர்கள்
மனிதனுக்குக்
காதல் முக்கியம்
அதை
விடவும் தேவையாகிறது
சமுதாயத்தில்
மதிப்பு
இணைந்த
உள்ளங்களை
பிரித்து
வைத்தது
திருமணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக