செப்டம்பர் 24, 2013

சோம்பேறிக் கடவுள்! (கடவுள் கடவுளாகிப்போனார் -22)

கடவுள் கடவுளாகிப்போனார் -22

கடவுளுக்கு உடல்நிலை
சரியில்லையென்று
மருத்துவமனை சென்றார்.
மருத்துவம் பார்த்து
பில் கொடுக்கப்பட்டது.
மீண்டும்
உடல்நிலை சரியில்லாமல் போனது.
கடவுளுக்குச் சோம்பேறித்தனம்
தொற்றிக்கொண்டது
சரி அப்புறம் பார்க்கலாம்
பார்க்கலாம் என்று
காலம் தாழ்த்தினார்.
ஒரு நாள் ஆம்புலன்ஸில்
போய் இறங்கினார்
அட்மிட்ஷன் நடக்கும் முன்பே
நான்கு லட்சம்
கட்டச் சொன்னார்கள்!
கடவுள் மறுத்து
மருத்துவம்  பாருங்கள்
பின்னர் கட்டிக் கொள்கிறேன் என்றார்!
முதலில் பில்
பின்னர்தான் ட்ரீட்மென்ட்
வாழ ஆசைப்பட்ட கடவுள்
பணம் கட்டினார்!
பணம் கட்டினார்!!
பணம் கட்டினார்!!!
நோய் குணமாகவே இல்லை
இறந்து போனார்!

இறப்பதற்கு முன்புதான்
புத்தி வந்தது கடவுளுக்கு!
நாமாக நடந்து சென்றால்
மருத்துவம் பார்த்த பின்னர்
பில் தருகிறார்கள்
நம்மை யாராவது தூக்கிச் சென்றால்
முதலில் பணம் கட்டு என்கிறார்கள்.

செத்தப் பிணங்களுக்குக் கட்டிய
பணங்களில் வாழ்கிறது
நவீன மருத்துவமனைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக