நவம்பர் 11, 2013

அடிப் போடி நாயே! – மேல்

ஒரு நாள் கூட
நான் நாய்க்குச் சோறிட்டதில்லை
வாலாட்டும் நாயை
ச்சீ… போ என்று
விரட்டிவிட்டு இருக்கிறேன்.
ஆசை ஆசையாய்
அன்பாய்… உயிராய்
உன்னையே சுற்றிச் சுற்றிக்
காதலித்தேன்.
காதலின்
வேக கட்டுப்பாட்டை மீறியதால்
சுடுகாட்டுத் தீயினுள்
எரிந்து சாம்பலாக
விறகுகள் அடுக்கி
தயாராக வைத்திருக்கிறார்கள்
நண்பர்கள்.
கடைசி வரை நீ வரவேயில்லை…
ச் சீ… என்று முன்னர்
துரத்திவிட்ட நாய் கூட
கொள்ளி வைக்கும் முன்
என்னை சுற்றிச் சுற்றி வந்தது
நீ வரவேயில்லையே ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக