ஏப்ரல் 08, 2014

மாநிலச் சிறைகள் - ஹைபுன் கவிதை

தண்ணீரும் மின்சாரமும் இருந்தால் கொடுக்கமாட்டோமா? குடித்ததுபோக கையில் கோட்டர் வைத்திருந்தவன் தெளிவாகக் கேட்டான்: இந்த கோட்டர் பாட்டில் எங்கிருந்து வந்துச்சி… இங்க இருந்து இல்லதானே? அதே மாதிரி தண்ணியையும் கரண்டையும் கெடக்கிற எடத்துலயிருந்து எடுத்துட்டு வர வேண்டியதுதானே! ஒரே அமுக்காக அமுக்கியது அவனைக் காவல்துறை.

எல்லோர் பொருட்டும்
ஓடும் நதி
மாநிலங்களுக்குள் சிறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக