ஹைக்கூ தோட்டம் போட்டி எண் – 2 (வசந்த காலம்) குறித்த சிறந்த ஹைக்கூக்கள்:
1. பின்பனி இரவில்
உறைந்து போயிருந்தன
காதல் கிளிஞ்சல்கள் -Ilaval Hari Haran
2. வறண்ட குளத்தை
கடக்க முடியவில்லை
செழித்திருந்தன முட்புதர்கள் - Sayee Ram
3. பரந்த நிலப்பரப்பெல்லாம்
பாறை முகடுகள்
நீருக்கலையும் மீன்கள் -கூரா அம்மாசையப்பன் ராமசாமி
4. நிறம்மாறும் மேகங்கள்
உதிர்ந்த இலையில்
ஒரு துளி நீர் -கவிஞர் வீரா
5. பசுமையான வயல்கள்
இடம்பெயரும் குருவிகள்
தூரத்தில் வேடன் Vanarajan N
6. இரவின் நிசப்தத்தை
கிழித்தெறிகிறது
ஆந்தையின் அலறல் -Vanarajan N
7. தவறிய மழை
குறைப்பிரசவப்பூக்கள் நிகழுமோ
மகரந்த சேர்க்கை -Aravindan R
8. மங்கிய நிலவு
இன்னும் கரை ஏறவில்லை
தவளைக் குஞ்சுகள் -சசி வீ
9. மெல்ல நகர்கிறது
வீட்டுக்கூரை மேல்
நத்தையும் சூரியனும் -Subhasree Sundaram
10. பறவைகளின் குரலில்
அன்பென அடைக்கலம்
கவன் கல்லின் மௌனம்! -Govind Dhanda
11. பயன்பாடில்லா சாலை
அழைக்கிறது
குருவிகளின் சப்தம் -Shahul Hameed
12. வீசிய விதை நெல்
சேற்றில் முழுகுகிறது
அடமானப் பொருள் -P.K. Samy
13. எலிவளையை எட்டிப்பார்த்த
முயலின் மீசை
மண்ணானது! -Amaruviappan Chary
14. கோபுரப் புறாக்கள் இறகை
அசைத்து இன்பத்தைக் கொண்டாடும்
உறை பனிக்காலம் -S Naga Lingam
15. குளிர் காலம்
போர்வை எதற்கு
சந்நதிக்குள் பல்லி -S Naga Lingam
16. பவுர்ணமி இரவு,
காளானைப் போல பூத்திருக்கிறது,
தூரத்து குடிசை. -Thooi Shan
17. கதிரோடு கண்ணாமூச்சி
மூடுபனி முகத்திரையில்
மேகக்கூட்டம் -கடலூர் மாரி முத்து
1. பின்பனி இரவில்
உறைந்து போயிருந்தன
காதல் கிளிஞ்சல்கள் -Ilaval Hari Haran
2. வறண்ட குளத்தை
கடக்க முடியவில்லை
செழித்திருந்தன முட்புதர்கள் - Sayee Ram
3. பரந்த நிலப்பரப்பெல்லாம்
பாறை முகடுகள்
நீருக்கலையும் மீன்கள் -கூரா அம்மாசையப்பன் ராமசாமி
4. நிறம்மாறும் மேகங்கள்
உதிர்ந்த இலையில்
ஒரு துளி நீர் -கவிஞர் வீரா
5. பசுமையான வயல்கள்
இடம்பெயரும் குருவிகள்
தூரத்தில் வேடன் Vanarajan N
6. இரவின் நிசப்தத்தை
கிழித்தெறிகிறது
ஆந்தையின் அலறல் -Vanarajan N
7. தவறிய மழை
குறைப்பிரசவப்பூக்கள் நிகழுமோ
மகரந்த சேர்க்கை -Aravindan R
8. மங்கிய நிலவு
இன்னும் கரை ஏறவில்லை
தவளைக் குஞ்சுகள் -சசி வீ
9. மெல்ல நகர்கிறது
வீட்டுக்கூரை மேல்
நத்தையும் சூரியனும் -Subhasree Sundaram
10. பறவைகளின் குரலில்
அன்பென அடைக்கலம்
கவன் கல்லின் மௌனம்! -Govind Dhanda
11. பயன்பாடில்லா சாலை
அழைக்கிறது
குருவிகளின் சப்தம் -Shahul Hameed
12. வீசிய விதை நெல்
சேற்றில் முழுகுகிறது
அடமானப் பொருள் -P.K. Samy
13. எலிவளையை எட்டிப்பார்த்த
முயலின் மீசை
மண்ணானது! -Amaruviappan Chary
14. கோபுரப் புறாக்கள் இறகை
அசைத்து இன்பத்தைக் கொண்டாடும்
உறை பனிக்காலம் -S Naga Lingam
15. குளிர் காலம்
போர்வை எதற்கு
சந்நதிக்குள் பல்லி -S Naga Lingam
16. பவுர்ணமி இரவு,
காளானைப் போல பூத்திருக்கிறது,
தூரத்து குடிசை. -Thooi Shan
17. கதிரோடு கண்ணாமூச்சி
மூடுபனி முகத்திரையில்
மேகக்கூட்டம் -கடலூர் மாரி முத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக