ம. ரமேஷ் ஹைபுன்:
ஆளும் கட்சி ப்ளக்ஸ் போர்டுகள். அரசியல்வாதிகள் கட்அவுட்டுகள்.
இளைஞர்களின் வரவேற்பு பேனர்கள். கூடவே கோயில் சாமியுடன் சாமியார்களின் பேனர்கள்… கூட்டம்
கூடிவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம். குடமுழக்காம். மறுநாள் செய்தித்தாளில்
கருடன் கோயிலை மூன்றுமுறை சுற்றிச் சென்றது என்று எழுதியிருந்தார்கள்!
இரையைத் தேடிய கருடன்
வேகமாய்க் கீழ் இறங்குகிறது…
குடமுழக்கு மக்கள் கூட்டம்
(நன்றி - மகிழன் மறைக்காடு அரவிந்தன் அவர்களுக்கு. கோயிலில்
விஷேசங்கள் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டுச் சென்றது என்று செய்தித்தாள்களில்
அடிக்கடி படித்திருக்கிறேன். ஏன் அப்படி என்று தெரியாமல் இருந்தேன். மகிழ்நன் மறைக்காடு
அவர்கள்தான் அது பக்திக்காக வரவில்லை. மக்களின் தலைகளை அது இரை என்று கருதிதான் கீழே
வருகிறது என்று தெளிவுபடுத்தினார்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக