”பசி வேளை
நாலுபேருக்கு நிறைந்தது
கூட்டாஞ்சோறு” –
ம.ரமேஷ்.
திருத்தத்திற்கு முன்னர் இப்படி எழுதப்பட்டது:
கொஞ்சம் சோறு; பசி
வேளையில்
நான்கு பேருக்கு மனம்
நிறைந்தது
கூட்டாஞ்சோறு
-
மூன்றாம் அடியில்
கூட்டாஞ்சோறு என்று வந்துவிட்டதால் முதல் அடியில் வரும் கொஞ்சம் சோறு என்பது தேவையற்ற
சொல்லாகப்பட்டது. பசி வேளையில் என்பது பசி வேளை என்று மாற்றப்பட்டது. வேளையில்
என்பது உரைநடை வார்த்தை. வேளை என்பது ஹைக்கூ வார்த்தை. மனம் என்ற வார்த்தை
நால்வருக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. யாரேனும் ஒருவருக்காவது இன்னும்
கொஞ்சம் கிடைக்குமா என்று இருந்திருக்கும். அதனால் மனம் என்ற சொல் நீக்கப்பட்டது.
நீக்கப்பட்டதால் இன்னும் அதன் பொருள் விரிகின்றது. நால்வருக்கும் நிறைந்தது
என்றால்? கொஞ்சம் சோறு எப்படி நிறைத்திருக்கும்? மனம், மகிழ்ச்சி, விளையாடும்
சுதந்திரம் என்பவை நிறைந்திருக்கும் என்பதைக் குறிப்பால் சுட்டும் விதமாக அமையும்.
நான்கு பேருக்கு என்பது நாலுபேருக்கு என்று மாற்றப்பட்டது. நான்கு பேர் என்றால்
நால்வரைமட்டுமே குறிக்கும்… நாலு பேர் என்றால் நான்கு என்ற எண்ணிக்கையைமட்டுமே
குறிக்காது இன்னும் சிலரையும் சேர்த்துக் குறிக்குதானே. அந்த நாலுபேரு குழந்தைகளா?
வளர்ந்தவர்களா? என்ற வினாவிற்கு மூன்றாம் அடி பதில் சொல்கிறது. கூட்டாஞ்சோறு
என்பதால் சிறுவர்கள்தான் என்று. ஒரு மூன்று அடி ஹைக்கூவுக்குள் இவ்வளவு இருக்க
வேண்டுமா என்றால்? இருந்தால் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக