காலந் தோறும் அடி வரையறையைக் கொண்டு தமிழ் இலக்கியங்கள் வகைமை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சீர்க் கவிதைகள் ஒரே ஒரு அடியில் முடிந்துவிடுவதால் அடிக் கவிதை எனப் பெயர் சூட்டாமல் ஒன்றிரண்டு சீர்களில் கவிதை முடிந்துவிடுவதால் சீர்க் கவிதை எனப் பெயர் சூட்டியுள்ளேன். ஒன்றிரண்டு சீர்களில் கவிதை இயற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல. வடிவத்திற்கேற்ப உள்ளடக்கத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்தக் கவிஞனின் கடமையாகிறது. கவிதையின் வடிவ சுருக்கத்தால் இருண்மை (கூடார்த்தம்) ஒரு உத்தியாகி விட்டது. கவிதையின் தலைப்புக்கேற்பவே உள்ளடக்கத்தின் பொருளை வாசகர்கள் விரித்துரைத்துக் கொண்டால் இருண்மையைத் தவிர்க்க முடியும். கால வேகத்துக்கு இந்த வடிவத்தை நவீனக் கவிதை உலகம் வரவேற்கும் என நம்புகிறேன்.
• பூக்கள்
இறைவனின் அழகு
• மழை
பூமிக்கான ஒப்பாரி
• விபச்சாரம்
தினமொரு கற்பு
• கல்வி
முதலீடு
• இலவசங்கள்
அரசியல்வாதிக்கு லாபம்
• சாதி
அரசியல் சூச்சமம்
• சமயம்
கட்டுச்சோறு
• கண்ணாம்பொத்தி
நீதிதேவதையும் வழக்குகளும்
• கண் பார்வை
குருடர்கள்
• சாலைகள்
விபத்துப் பகுதி
• தீவிரவாதி
கருணையாளன்
• உலகம்
இறைவனின் சந்நிதி
• பெண் விடுதலை
இந்திய சுதந்திரம்
• கடல் அலை
கால்வாறுதல்
• காதல்
இரண்டாவதாக வாய்ப்பது
• குடுகுடுப்பைக்காரன்
எதிர்காலமற்றவன்
• கவிதை
பொய்மெய்
• கடவுள்
அவனுக்குள் அவன்
• விவாகரத்து
கொத்துமல்லியின் விதை
• சீரியல்
கதையல்ல நிஜம்
• தீர்ப்பு
யாருக்கு உண்மை
• கடிகாரம்
மனித இயக்கி
• தேன்
பூக்களின் எச்சில்
• வெள்ளை நிறம்
எல்லோரும் கலங்கம்
• கரு
விடியல்
• துடப்பம்
சுத்தத்தை அசுத்தப்படுத்துவது
• தாலி
விபச்சாரத்திற்குப் பாதுகாவல்
• நிலவில் மனிதன்
பொருளாதார இழப்பு
• குழந்தை
இறைவனுக்குப் பொம்மை
• அறுவடை
வீட்டுக்குப் பதர்
• ராமர்பாலம்
ராவணர்களுக்குக் கொண்டாட்டம்
• கட்டுச்சோறு
சுமை
• கருணைமனு
வினைக்குத் தினை
• மின்மினி
அசைவ மின்சாரம்
super pa neengale kavidaigalin vagaiyai uruvakreengala?
பதிலளிநீக்குromba nalla irukku
un kavithaigalil
பதிலளிநீக்குvithaigalum
vizhuthugalum
virutchangalum
vanthu vizhukinrana
mannil vizhum mazhai thuli pol!