மார்ச் 26, 2013

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூக்கள்


பொறுப்புடன் படிக்கிறார்கள்
தேர்வுக்காக
தோல்வி அடைந்தவர்கள்

சுயநினைவின்றி
யோசிக்கிறோம்
கனவுகள்

சுயநினைவின்றி
கடந்து செல்கிறது
நெடுஞ்சாலைப் பயணம்

வெற்றுப் பார்வை
நிரம்பியிருக்கிறது
உள்ளார்ந்த அர்த்தங்கள்

அலங்கரிக்கப்பட்ட மேடை
அழுது கொண்டிருக்கிறார்கள்
பிரிவு உபச்சார நேரம்

கடுமையையும் மீறும்போது
சிரிப்புதான் வருகிறது
குழந்தையின் குறும்புத்தனம்

ஆயிரம் கனவுகள்
முடிச்சு போடப்படுகிறது
விடைத்தாளைக் கட்டும் மாணவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக