அக்டோபர் 11, 2013

கொடுத்த முத்தங்கள் வீண்தானே!

கண்ணை இறுக்கி
உன்னை
மனக்கண் முன்
நிறுத்தி
கொடுத்த
முத்தங்கள் எல்லாம்
வீண்தானே!

என்று கவிதை எழுத
முடிந்த உன்னால்
வேறு என்ன செய்ய முடிந்தது?

இன்று கவிதையாகவும்
கற்பனையாகவும்
தவிப்பது

நான் அல்லவா?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக