ஐந்து ஐந்து
ஆண்டுகள்
என்பது
பசுமை புரட்சிக்கா
அல்ல
அரசியல்
மாற்றி
அரசியல்வாதிகளை மாற்றி
அரசியல்
செய்து
அவரவர்களுக்கான
சம்பாத்திய புரட்சியா?
அறுபது
ஆண்டுகளில்
இந்தியா
வளர்ந்திருக்கிறது
அதிகம் ஏழைகளை
பசி
பட்டினிகளையும்
சேர்த்தே
வளர்த்திருக்கிறது
கொடி
ஏற்றும்போது
சொல்லப்படுவது
எல்லாம்
காற்றில்
கொடி அசைவது போல
அசைந்து
அசைந்து
ஆட்சியாளர்களிடம்
போய்ச்
சேர்வதற்கு முன்னர்
மாலையில் கொடி
அவிழ்த்ததும்
காலையில்
கொடி காணாமல்
போவதுபோல
திட்டங்களும்
காணாமல்
போய்விடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக