மார்ச் 25, 2014

நன்றிக்காக எச்சம்! - ஹைபுன் கவிதை

(உண்மை சம்பவம் – ஹைபுன் கவிதையாகியுள்ளது)
நேற்று காலைப்பொழுதில் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். காக்கையின் குஞ்சு ஒன்று சாலையில் பறக்க சக்தியின்றி வாகனங்களுக்கு மத்தியில் தத்தித் தத்தித் தப்பித்துப் பிழைப்பதைப் பார்த்து, காக்கைகள் கரைந்து கொண்டிருந்தது. வாகனத்தை நிறுத்தி அதைப் பிடித்து சாலை பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையில் விட்டேன்… மாலையில் அவ்வழியே திரும்ப பயணிக்கையில் அந்த மரத்தின் கீழ் நின்று பார்த்தேன். ஒரு காக்கை என் தலைமேல் எச்சமிட்டது. உற்றுப்பார்க்கையில் எச்சமிட்ட காக்கையின் பக்கத்தில் காப்பாற்றிய  குஞ்சு பத்திரமாக இருந்தது.

காப்பாற்றிய நன்றிக்காக
தலைமேல் எச்சமிட்டது
காக்கை

(இன்னும் சுருக்கமாக இப்படி எழுதலாம்)

நன்றிக்காய்
எச்சமிட்டது

காக்கை

3 கருத்துகள்: