மார்ச் 27, 2014

அஃறிணை இளைஞன் - ஹபுன் கவிதை

கிராமத்தை நோக்கிப் பயணமானேன். சாலையோர நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக்கப்பட்டிருந்தன. முதியவர் ஒருவர் கலப்பையோடு எதிர்பட்டார். இந்தத் தள்ளாத வயதிலுமா என்று வினவினேன்… இளைஞர்கள் விவசாயம் செய்ய தயங்குகிறார்கள். அவர்களுக்குத் தேவை உடல் உழைப்பில்லா சம்பளம்தான்… என்னென்னமோ பேசினார்…

தென்னை மரத்தின் கீழ்
நெற்கதிர்களைக் கொரிக்கும்
அணிற் கூட்டம்


(கவிதையின் பொருள் புரியாதவர்களுக்கு… உயரப்போய் தென்னையை ருசிக்க இன்றைய அஃறிணை உயிர்களும் தவிர்த்து எளிமையாகக் கிடைக்கும் நெற்கதிர்களை ருசிக்கிறது. வயிறு நிறைந்தால் சரி என்று. இன்றைய இளைஞர்களும் அப்படியே...)

1 கருத்து: