மார்ச் 11, 2017

இதுதான் ஹைக்கூ விளக்கத்துடன் ராஜன் ராஜ்

சக்திப்பிரியன்    ஹைக்கூ
விளக்கம் - ராஜன் ராஜ்
அந்த ஹைக்கூவின் முதல் வரி
என ஆரம்பிக்கிறது. யாருக்கு நிறைமாதம் ஒரு பெண்ணுக்காக இல்லை விலங்கிற்காக என்பதை இங்கு தெளிபடுத்தடுத்தப்படுவில்லை கவிஞர்.
ஹைக்கூவை பொறுத்தவரை அது நல்ல சூட்சுமம் தான். அதையடுத்து ஹைக்கூவின் அடுத்த வரியை படித்தேன்.
என இரண்டாம் வரி நிறைவுகிறது. இந்த வரி முதலாம் வரிக்கான சந்தேகத்திற்கும் ஊகிப்பிற்கும் முற்றுப்புள்ளியாக அமைகிறது. விலங்கினத்தின் கர்ப்பம் பற்றி முதல் வரியில் கவிஞர் சொல்லவில்லை என்பதை இரண்டாம் வரி தெளிவாகச் சொல்கிறது. கணவன் சுமக்கிறான் என்னும் போது அவன் மனைவியாகத்தானே இருக்க வேண்டும்.
சரி ஏன் அவளை கணவன் சுமக்க வேண்டும். அன்பின் மிகுதியாலா இல்லை அவளால் நடக்க இயலாமையால, இல்லை பிரசவ வலியாலா அப்படியென்றால் வேறு ஏதும் வாகனமில்லையா அவளைச் சுமக்க, அப்படியாயின் குடும்பத்திற்கு வறுமையா என்னும் எண்ணங்கள் ஓடுகிறது.
இல்லாவிடின் வாகனத்திலிருந்து இறக்கி வேறு எங்கோ தூக்கியும் சென்றிருக்கலாம் தானே. எது எவ்வாறோ இருக்கட்டும் கணவன் தன் நிறைமாத கர்ப்பினி மனைவியை தூக்கிறான் என்பது மகிழ்வான விடயமே. தூக்குமளவிற்கு வீரமும் அவனுக்குள்ளது என்பதும் புலனாகிறது.
அத்தோடு கவிஞர் #சுமந்து_செல்கிறான்_கணவன் என இரண்டாம் வரியை முடித்திருப்பதிலிருந்து கவிஞர் தன்னைச் சொல்லவில்லை அதாவது அந்த கணவன் அவர் இல்லை என்பது புலனாவதோடு இங்கு கவிஞர் தவிர்ந்த இரண்டாம் நபர் பற்றியதாக இக் கவி அமைகிறது என்னும் முடிவை இரண்டாம் வரி எனக்களிக்கிறது. அப்படியே மூன்றாம் வரியையும் படித்தேன்
என மூன்றாம் வரி முற்றிலும் மாறுபட்டு அமைந்து திருப்பத்தை அளிக்கிறது. முன்பு நான் எதிர்பார்த்து ஊகித்த பலவற்றை மூன்றாம் வரி ஏமாற்றிவிட்டது. அந்நிலையில் மீண்டும் கவிதையை முழுமையாக ஒரு மூச்சாக படித்தேன்.
நிறைமாத கர்ப்பம்
சுமந்து செல்கிறான் கணவன்
ஒட்டகத்திற்கு தண்ணீர்
ஏன் கணவன் ஒட்டகத்திற்கு தண்ணீர் சுமக்க வேண்டும். ஒரு வேளை ஓட்டகத்திற்கு கர்ப்பமோ என எண்ணத் தோன்றுகிறது. அப்படியென்றால் தண்ணீர் சுமப்பவன் கணவன் என வருகிறதே மனிதன் எப்படி ஒட்டகத்திற்கு கணவனாக முடியும் என்னும் பெருத்த கேள்வி இப்போது எழுகிறது. அதற்கு ஒரு வேளை கவிஞர் பெண்பாலாக இருந்து அவருடைய கணவர் ஓட்டகத்திற்கு தண்ணீர் சுமந்து சென்றிருக்கலாம் அதை கவிதை எழுதும் அவனது மனைவி பார்த்து ஹைக்கூவாக சொல்லியிருக்கலாம் என நினைத்தால் பதில் சரியாக இருக்கும். ஆனால் சக்திபிரியன் திருமணம் ஆகாத ஒரு ஆண் என தெரிந்தவர்கள் இவ்வாறு நினைக்கமாட்டார்கள்.
பொதுவாக ஒட்டகங்கள் அரபு நாடுகளில் அதிகம் காணப்படும். சக்திபிரியன் அரபு நாட்டில் பணி புரிகிறார் அங்கு அவர் இப்படியான காட்சியை கண்டு எழுதியிருக்கலாம்.
அது எப்படியான காட்சி என்பதே இறுக்கமான முடிச்சாக அமைகிறது. கணவனும் மனைவியும் ஒட்டகத்தில் பிரயாணம் போயிருக்கலாம். அது அவர்களின் ஏழ்மையாலும் இருக்கலாம் இல்லாவிடின் செல்வந்த குடும்பமாக இருக்கலாம். பணக்கார குடும்பமெனின் பிறகு ஏன் ஒட்டகத்தில் மனைவியை ஏற்றிச் செல்ல வேண்டும் என்னும் கேள்வி எனக்கு எழுவது போல் உங்களுக்கும் எழலாம். கர்ப்பகாலங்களில் பெண்களின் ஆசைகளோ ஆச்சரியமானதாக அமையும். அவ்வாறான ஆசையால் இப் பெண் ஓட்டகத்தில் போக ஆசைப்பட்டிருக்கலாம். இல்லாவிடின் பணக்காரர்களுக்கும் ஏழ்மையை அனுபவிக்கும் ஆசை எழுவது சகஜமானதே அப்படியாகவும் இந்த காட்சியை பார்க்கலாம். பிறகு ஏன் ஓட்டகத்திற்கு தண்ணீர் சுமந்து வர வேண்டும் என்னும் கேள்வியும் எழுகிறது. ஒட்டகத்திற்கு தாகமோ அல்லது களைப்போ மயக்கமோ ஏற்பட்டிருக்கலாம் அதனால் நகரமுடியாமல் அது படுத்தபடியோ அல்லது நின்றபடியோ இருந்திருக்கும் தன் நிறைமாத மனைவியை அழைத்துச் செல்ல ஒட்டகத்திற்கு தண்ணீரை கொடுத்து அதன் களைப்பை போக்க முற்பட்டிருக்கலாம். அதற்காக கணவன் தண்ணீர் சுமந்து வந்திருக்கலாம் எனவும் எண்ணத் தோனுகிறது.
இன்னொர் வகையில் நிறைமாத கர்ப்பவதியான மனைவியை கவனிக்காத கணவனின் அசமந்த போக்கை சக்திபிரியன் நகைக்கிறாரோ எனவும் எண்ணத் தோனுகிறது. ஒட்டகத்தை வளர்க்கும் பராமரிக்கும் கணவன் தனது கர்ப்பமான மனைவியை கவனிக்காது பொறுப்பற்று இருப்பதை ஜாடையாக எள்ளி நகையாடி சொல்வது போலும் தெரிகிறது.
ஆனால் இதில் இன்னொர் படிகத்தன்மையும் உள்ளது. அது எப்படியாக என்றால் இந்த குடும்பம் ஒரு வறுமைக் குடும்பமாக இருப்பின் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் மனைவியின் மருத்துவச் செலவீனங்களுக்காக பாடுபாடும் கணவனின் உழைப்பையும் அவனுக்கு இருக்கும் இரு பக்க நெருக்கடியும் சக்திபிரியன் சொல்லியிருக்க கூடும்.
இப்படியாக பொருள் தேடலில் சிக்கல் தன்மை ஏற்படுவதற்கு காரணம் கவிஞரின் வெளிநாட்டு பணியே. இதனால் கவிதையின் காட்சி எந்த நாட்டிற்குரிய களமாக இருக்கும் என்பது இதிலுள்ள பெரிய சிக்கடியாகும். நான் நினைக்கிறேன் கவிதையின் முதல் வரியான
நிறைமாத கர்ப்பம்
என்பது தமிழகத்தை சுற்றியும் பின்னிரு வரிகளான
சுமந்துசெல்கிறான் கணவன்
ஒட்டகத்திற்கு தண்ணீர்
என்பவவை அரபு தேசத்தினை களமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். அது எவ்வாறு என்றால் தன்னுடன் பணி புரியும் சக நண்பரின் மனைவி தமிழ்நாட்டில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கலாம். அதை பணிபுரியும் நண்பர் சக்திபிரியனிடம் சொல்லியிருக்கலாம். நண்பர் ஒட்டகத்தை பரமாரிக்கும் வேலையில் ஈடுபடும் போது சக்திபிரியனுக்கு நண்பர் முன்னர் சொன்ன விடயம் ஞாபகத்திற்கு வந்ததும் மூன்றாம் நிலை மனிதராக கவிதை எழுதியிருக்கலாம்.
இல்லாவிடின் ஒட்டகத்திற்கு தண்ணீர் வைக்கும் நண்பர் தன் மனைவியை பார்க்க முடியாமல் படும் அவஸ்தையும் ஆதங்கத்தையும் சொல்ல சக்திபிரியனின் கவிதை உள்ளம் விரிந்து அதனை உள்வாங்கி ஹைக்கூவாக மலரச் செய்திருக்கலாம் என்பதையே எனது முடிவான அனுமானமாக அமைகிறது.
எது எவ்வாறாயினும் ஒரு ஆணின்,உழைப்பு,வேதனை,ஆற்றாமை, ஆசை, வெளிநாட்டு வாழ்வில் இருந்தபடி உள்நாட்டிலிருக்கும் மனைவி மீதான அன்பு, கரிசனை என்பதை சொல்வதாகவும் அமைகிறது. ஒரு கோணத்தில் கணவனின் அசமந்த போக்கை சொல்வதாகவும் இக் ஹைக்கூவை கவிஞர் சக்திபிரியன் விரியச் செய்துள்ளார்.
இந்த கவிதையின் பொருள் இறுக்கத்திற்கு காரணம் காட்சியின் களங்கள் எங்கு என்பதை திட்டவட்டமாக சொல்லாமையே. அதுதான் இக் ஹைக்கூவின் வெற்றியுமாக மாறியிருக்கிறது.
நண்பர் சக்திப்பிரியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்னொரு ஹைக்கூவோடும் இன்னொரு தேநீர் கோப்பையோடும் மீண்டும் வருவேன்.
பா.தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக