மார்ச் 05, 2017

இதுதான் ஹைக்கூ - தெளிவு கொள்வோம்.

 Saradha Kannan - ராஜன் ராஜ் - நன்றி
#மூன்றடிக்கு நூறடிகள் விமர்சனம்.. 
ஹைக்கூ மீது அவருக்குள்ள தணியா தாகத்தை காட்டுகிறது..
சேவல் சண்டை 
காலில் பலத்த காயம் 
கூட்ட நெரிசல் - Saradha Kannan

#பலமான_ஈற்றடியோடு_ஒரு_ஹைக்கூ
ஒரு நல்ல ஹைக்கூ வாசகனுள் தரிப்பை ஏற்படுத்திவிடும். அந்தஹைக்கூ தன்னைப் பற்றி தேட வாசகனை அழைத்தும்விடும். அப்படியான ஒரு ஹைக்கூவை நேற்றிரவு Saradha Kannan அவர்களின் முகநூல் பதிவில் படிக்க நேர்ந்தது மகிழ்சியளித்தது என்பதோடு அதன் ஈற்றடி விசாரங்களை என் சிந்தைக்கு ஏற்படுத்தியது. அந்த கவிதையின் முதலாம் வரி
#சேவல்_சண்டை
என ஆரம்பமாகிறது. இவ்வரியை நான் படித்ததும் இயல்பாக இரு சேவல்கள் சண்டையிடும் காட்சி என் மனக் கண்களுதோன்றியது. நாம் வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்குள் இவ்வாறு சேவல் சண்டை நிகழ்வது இயல்பானதே. என நினைத்துவிட்டு இரண்டாம் வரியை படித்தேன்.
#காலில்_பலத்த_காயம்
என இரண்டாம் வரி அமைந்திருந்தது. சரி யாரின் காலுக்கு பலத்த காயம் இரு சேவலில் ஒரு சேவலின் காலுக்கா இல்லை அந்த சண்டையை பார்த்திருப்பவருக்கா என்னும் எண்ணத்தை இரண்டாம் வரி கொடுத்திருக்கையில் மூன்றாம் வரியை படித்தேன்.
#கூட்ட_நெரிசல்
என மூன்றாம் முடிந்திருந்தது. மீண்டும் ஒரு மூச்சாக ஹைக்கூவை வாசித்தேன்.
சேவல் சண்டை 
காலில் பலத்த காயம் 
கூட்ட நெரிசல்
நாம் எதிர்பாராத ஆச்சரியமான திருப்பத்தைத்தான் இந்த மூன்றாம் வரி தந்திருக்கிறது. 
இந்த வரியால் என்னுள் எழுந்த பல ஐயங்களின் கட்டுக்களை என்னால் அவிழ்க்க முடிந்தது.
அந்தவகையில் இந்த சேவல்ச் சண்டை கிராம/நகரத்தில் இடம் பெறும் சேவல் சண்டை போட்டி என்னும் முடிவை ஈற்றடி தந்தது.
யாருக்கு பலத்த காயம் ஏன் பலத்த காயம் வர வேண்டும் என்பதற்கான புதிர்களுக்கான விடையும் இவ் ஈற்றடியிலே உள்ளது. சேவல் சண்டை போட்டியை பார்க்க பார்வையாளர்கள் நிறைந்திருந்திருக்கலாம். அதனால் இக் கவிஞரும் அக்கூட்டத்தில் நின்றிருக்கலாம் அதில் அவர் கால் மிதியுன்டு இருக்கலாம் இல்லாவிடின் வேறு ஒரு பார்வையாளனின் கால் மிதி பட்டு காயம் வந்திருக்கலாம். இல்லாவிடின் கவிஞருக்கு அல்லது வேறு பார்வையாளருக்கு ஏற்கனவே காலில் சிறு காயமிருந்திருக்கலாம் நெரிசலால் அது பலமாக பெரிதாக மாறியிருக்கலாம். இல்லாவிடின் மிதிபட்டு அல்லது காலில் ஏற்கனவே கவிஞருக்கு அல்லது வேறு ஒரு பார்வையாளருக்கு காயமிருந்திருப்பின் அவ் வலியை போக்க அமர முடியாத அளக்கு இருக்கும் சன நெருசலை கவிஞர் சொல்லி இருக்கலாம். இல்லாவிடின் உண்மையிலே கோழியின் காயத்தையும் சொல்லியிருக்கலாம். எனவும் எண்ணுகிறேன்.
இவற்றை விடுத்து இவ்வாறும் அமைந்திருக்க கூடும் சேவல் சண்டையிட அவற்றின் கால்களில் காயம் வர எந்தச் சேவல் வெற்றியீட்ட போகிறது என்னும் ஆர்வத்தில் மக்கள் கூடுவதையும் சாரதா கண்ணன் சொல்லியிருக்கலாம்.
இல்லாவிடின் சேவல் சண்டை நிகழ்த்த தடையிருப்பின் பொலிஸாரோ அல்லது அது குறித்த அமைப்போ வந்திருக்கலாம் அதனால் மக்கள் பீதியில் ஒடும் போது கீழே விழுந்து காயம் வந்திருக்கலாம், இல்லாவிடின் விழுந்தவரை மக்கள் மிதித்து காயம் வந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
இவற்றைத் தவிர இவ்வாறும் நிகழ்ந்திருக்கக்கூடும். இரு தரப்பு சேவல் காரர்களின் வெற்றி தோல்வி சண்டையாக உருவெடுத்திருக்கலாம். அதில் யாருக்கோ பலத்த காயத்தை ஏற்படுத்தும் படியான தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம். இல்லாவிடின் அச் சண்டையில் பீதியுற்று மக்கள் ஓடும்போது யாரோ ஒருவரின் கால் மிதிபட்டோ விழுந்தோ காயப்பட்டிருக்கலாம்.
ஏன் இற்றையேல்லாம் விடுத்து சண்டைச் சேவல் பார்த்திருப்பவரை கொத்தியிருக்கலாம். காலில் காயமிருந்திருக்கலாம் அது கொத்து வாங்கிய பின் பலமாக மாறியிருக்கலாம். இல்லாவிடில் சேவல் தூரத்த சேவல் சண்டை பார்க்க வந்தவர்கள் கலைந்து ஓடியிருக்கலாம் அதனால் மிதிபட்டு விழுந்து யாரோ ஒருவருக்கு காயம் வந்திருக்கலாம்.
தவிர அரசியல் கட்சிகளின் கண்ணோட்டத்தோடு குறியீட்டு கவிதையாகவும் இதனை பார்க்கலாம் தொண்டர்களின் பாதிப்பு நிலையை சுட்டுவதாகவும் இக் ஹைக்கூ என் பார்வையில் அமையப் பெறுகிறது.
மேற் சொன்ன ஹைக்கூ குறித்த பார்வைகள் எனது பார்வைகளே நீங்கள் வேறு கோணங்களுடாகவும் பார்க்க இயலும் நண்பர்களே. அதில் தவறில்லை.
இந்த ஹைக்கூவின் முழுப் பலமும் இதன் சிறப்பான ஈற்றடியிலே அமைந்துள்ளது. அத்தோடு அது முன்னிரு வரிகளுக்கு இயைபுபட்டு வந்திருப்பதோடு பாரிய திருப்பத்தையும் கொடுத்துள்ளது. அருமையான ஹைக்கூவை படைத்த சாரதா கண்ணன் அக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இப்போது சேவல் சண்டையை பார்த்த உணர்வுவோடு நிறைவு செய்கிறேன். மீண்டும் இன்னொரு ஹைக்கூவோடு வேறு பரிணாமத்தோடு வருவேன்.
பா.தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக