இறைவா
எனக்கான வேண்டுதலை
நீ
எந்த நாளிலும்
நிறைவேற்றப்போவதில்லை தானே?
வயதுகள் வளர்கின்றது
நாம்
நம் காதலால்
இளமைக்குத் திரும்பி
குழந்தையாகிக் கொண்டிருக்கிறோம்
வழக்கம்போல்
நீ
விடைபெற்றுச் செல்கிறாய்
நீ வரும் கனவு
பாதியில் கலைந்துவிடுவதைப்போல
பூங்காவில்
என் பக்கத்தில்
அமர்ந்துபேச மறுப்பவள் நீ...
என்னை வந்து
கொஞ்சி விட்டுச் செல்லும்
உன் நினைவுகளைக்
கொஞ்சம் கட்டுப்படுத்தி வை
தினம் தினம்
உன்னைக் காண ஆசைப்படும்
என் மனத்திடம்
நீ
ஒவ்வொரு முறையும்
ஏதோ ஒன்றைச் சொல்லி
ஏமாற்றிவிட்டுப் போகிறாய்
என் நினைவுகளை
நிராகரிக்கும் நீ
கனவுகளை மட்டும்
ஏற்றுக்கொண்டு
உயிர் வாழ்வது ஏனோ?
நிம்மதியின்றித்
தவித்துக்கொண்டிருக்கும்போது
இறைவனிடம் கேட்டும் கிடைக்காத
எளிய வரத்தை
நீ என்னைப்
பார்க்க
வந்து செல்லும்
அந்த ஒருநாள்தான்
நான் வாழ்வதற்கான
வரத்தைத் தந்துவிட்டுப் போகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக