குழந்தை
ஏன் அழுகிறதென்று
தாய்க்கே தெரியாததுபோல
நான்
அழுவதற்கானக் காரணமும்
காதலுக்குத் தெரியாமல் போய்விட்டது
எனக்குக் கண்ணீர்கூட
அழகென்றாய்
இன்று
அழ வைத்தே பார்த்துக்கொண்டிருக்கிறாய்
நினைவுகள்
மறந்துபோயிருக்கும் என்றெண்ணி
என்னை நீயும்
உன்னை நானும்
தவறாக நினைத்துக்கொண்டு
ஒருவரையொருவர்
நினைத்துக்கொண்டே இருப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக