நான்
கண் கலங்கி நிற்கும்போதும்
உனக்கு
அதுவும் அழகென்றுக்கூறி
என் முகத்தில் வெட்கச் சிரிப்பைக்
கொண்டு வந்தவன் நீ
காதல்
துரோகங்களுடன் கூடிய
பாழுங் கிணறென்று தெரிந்தே
விழுந்தோம்
- விழுகின்றோம்
காதலியே!
நீ மட்டும்தான்
என்னை
ஏமாற்றிச் சென்றுவிட்டாய் என்று
அழுது புலம்பிக்கொண்டிருக்காதே
அந்தக் கடவுளும்தான்
என்னை ஏமாற்றி இருப்பானென்று
நிம்மதி கொள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக