ஜூன் 16, 2012

கடவுளும்தான் ஏமாற்றிவிட்டான் (கஸல்)


நான்
கண் கலங்கி நிற்கும்போதும்
உனக்கு
அதுவும் அழகென்றுக்கூறி
என் முகத்தில் வெட்கச் சிரிப்பைக்
கொண்டு வந்தவன் நீ

காதல்
துரோகங்களுடன் கூடிய
பாழுங் கிணறென்று தெரிந்தே
விழுந்தோம் - விழுகின்றோம்


காதலியே!
நீ மட்டும்தான்
என்னை
ஏமாற்றிச் சென்றுவிட்டாய் என்று
அழுது புலம்பிக்கொண்டிருக்காதே
அந்தக் கடவுளும்தான்
என்னை ஏமாற்றி இருப்பானென்று
நிம்மதி கொள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக