செப்டம்பர் 30, 2012

கடவுள் - 1


எனக்கு ஏன் இந்த வேலை?
கடவுளைப் பார்தால் கேட்க வேண்டும்
என்பான் சலூன்காரன்.
உண்மையை மறைக்காத கண்ணாடி.
சலூன்காரன் முன்
கடவுளின் முகம்
கண்ணாடியில் தெரிந்தது.
சலூன்காரன்
முடிதிருத்தம் செய்துகொண்டே
பார்த்துக்கொண்டிருந்தான்
தொலைக்காட்சியில்
சேனலை மாற்றி மாற்றி
குத்துப் பாடல்களை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக