செப்டம்பர் 30, 2012

கடவுள் 2,3


கடவுள் – 2

மழையே இல்லையே!
பொங்க வைப்போம் வாங்க!
அப்பவாவது கடவுள்
கண்ணு தொறக்கறாரான்னு பாப்போம்.’
பொங்க வைத்தார்கள்.
மழை கொட்டியதில்
இடி விழுந்து
ஒருத்தி இறந்துபோனால்!
இப்போது ஒருத்தி
இன்னொருத்திக்குச் சொல்லிப்
புலம்பிக்கொண்டால்
கடவுளுக்குக் கண்ணே கெடையாது!’


கடவுள் – 3

கடவுளின் முகவரி
இன்னும் மாறாமல்
அதே வார்டில்
வாக்காளர் அடையாள அட்டையாக இருந்தது.
தனக்கு இறப்பு இல்லை என்பதை
நினைப்பதற்கு முன்
கடவுளின் விரலில் மை வைக்கப்பட்டது.
மின்னனு எந்திரத்தில்
பட்டன் அழுத்தியதும்
நினைத்துக்கொண்டார்
ஓட்டு யாருக்குப் பதிந்ததோ
கடவுளுக்கே வெளிச்சம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக